கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
என் வாழ்வு எனக்கில்லை
++++++++++++++

வசந்த காலம் வந்து விட்டது !
வளர்ந்து வருகுது
ஒவ்வொன்றும் தளிர்த்து !
உயர்ந்த
சைப்பிரஸ் மரமும் வளருது
நாமிந்த இடத்தை விட்டு
நீங்கக் கூடாது !
கிண்ணத்தின் விளிம்பைச் சுற்றி நம்
எண்ணத்தைப் பகிர்கிறோம் !

++++++++++++++++

இசைக்கீதம் யாரேனும் பாட விழைந்தால்
இனிமை மிக்கதாய் இருக்க வேண்டும் !
நாம் ஒயின் குடிக்கிறோம்
நமது வாயிதழ் மூலமின்றி !
நாம் உறங்கி விழுகிறோம்
நமது படுக்கையில் இருந்தல்ல !
கிண்ணத்தை நெற்றியில் உரசு
இறப்புக்கும், வசிப்புக்கும் அப்பால்
இந்த நாளை சிந்தித்துக் கொள்வீர் !

+++++++++++++

மற்றவர் வைத்திருப் பதை எல்லாம்
மனதில் இச்சிப்பதை
விட்டு விடு !
அதுவே பாதுகாப் புனக்கு !
எங்கு பாதுகாப் புள்ள தெனக்கு
என்று கேளாய்
இனிமேல் !

++++++++++++++++++

வினாக் களைக் கேட்க
வேண்டாம்
இந்த ஒரு நாள் !
நாள்காட்டி சுட்டும் எந்த ஒரு
நாளும் வேண்டாம் !
இந்த நாளுக்கு
ஓர் உணர்ச்சி உண்டு !
இந்த நாள்
நமக்கு நேச மானது !
உணவு போன்றது !
பரிவானது ! சொல்வதை விட
எளிதானது !

+++++++++++++++++++

சிந்தனை யாவும் வார்த்தைகள்
செதுக்கியவை !
ஆயினும்
இந்த நாள்
சிந்தனைக்கும் கற்பனைக்கும்
அப்பாற் பட்டது !
அவை இரண்டும் தாக முள்ளவை
தண்ணீ ருக்கு மென்மை
தருபவை !
அவற்றின் வாய் வரண்டவை !
களைத்துப் போனவை !
இக்கவிதையில்
மற்றவை படிக்க இயலாமல்
மங்கிப் போனவை !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 20 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts