ராமலக்ஷ்மி, பெங்களூர்
வெத்தலயக் கொதப்பிக்கிட்டு
வீதிபாத்து நிக்கையில
வீசினாங்க பொதுசனங்க
போறபோக்குல கேள்விகள
”கோடிவீட்டுக் குப்புச்சாமி
சீட்டுப் புடிக்கப் போறாராமே?”
”அதிகவட்டிக்கு
ஆசைப்பட்டே..
உள்ளதும் போச்சு
நொள்ளக் கண்ணாதான்!”
“வூட்டல கோச்சுக்கிட்டு
பட்டணம் போன பரமேசு?”
”ஆத்திரமாக் கெளம்பி
அமாவாசைக்கு போனவன்
பகரணைக்கு ரெண்டுபகல் கெடக்கையில
பழய குருடி கதவத் திறடின்னு
பொட்டியோட வந்துப்புட்டான்!”
”சொலவட சொலவடயா
எடுத்தெடுத்து விடுதியே
இதும் பின்னால
ஏதாச்சும் கதயிருந்தா சொல்லேன்
பொழுதாச்சும் போவும்”
‘யாருக்குத் தெரியும்’
வந்த வார்த்தைய
வசதியா தொண்டைக்குள்ள
அமுக்கிப்புட்டு
”எடத்தக் கொடுத்தா
மடத்தப் புடுங்குதியே
தலக்கு மேல கிடக்கு வேல”
நொடிச்சிக்கிட்டுத் தப்பிச்சாலும்
முழுநாளும் கழிஞ்சுது
பழயகுருடியப் பத்திய நெனப்புல
போட்டது போட்டபடி கிடக்க
எப்படி சோடிக்கலாம் ஒரு கதயன்னு
சும்மாக் கிடந்த சங்கை
ஊதிக் கெடுத்தக் கதயா.
*** *** ***
- சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12
- அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
- துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
- மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்
- பார்சலோனா -3
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி
- முள்பாதை 46
- குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு
- MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organizes Monthly screening of Documentaries and Short films
- தந்தையும் தாயுமான அதிபர்.
- திலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா
- பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி
- முள்பாதை = வாசகர் கடிதம்
- பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு
- கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
- பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
- மேட்ரிக்ஸ் தமிழில்
- யெளவனம்
- அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!
- இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)
- உவமையும் பொருளும் – 1
- கோகெய்ன்
- இசட் பிளஸ்
- எரியாத முலைகள்
- மறுபடியும் அண்ணா
- காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.
- காதுள்ளோர் கேட்கட்டும்
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை
- குற்றமிழைத்தவனொருவன்
- சும்மாக் கிடந்த சங்கு
- கடிவாளம்
- இரண்டு கவிதைகள்
- தாணிமரத்துச் சாத்தான்…..!
- வனச்சிறுவனின் அந்தகன்