ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
பூமியின் கூக்குரல்
++++++++++++++
புவித்தளம் போல் உணர்கிறேன்
வியப்புடன் !
எத்துணை அரிய விளைவை
பெற்று வந்துள்ளது
இச்சூழ்வெளி !
எனக்குத் தெரிந்த தெல்லாம்
என்னுள் வளரும் !
ஒவ்வொரு மூலக்கூறையும்
மழைப் பொழிவு
கர்ப்பம் ஆக்கும்
மர்மத்தை நிரப்பி !
பிள்ளைப் பேறு வலியில்
தாயுடன் அலறுவோம்
நாமெல்லாம் !
பூமியும் அலறு கிறது :
“நான்தான் சத்தியம் !
கீர்த்தி இங்குள்ளது !”
++++++++++++++++
திறக்கிறது பூமி ! அதிலிருந்து
பிறக்கிறது ஓர் ஒட்டகம் !
மரம் ஒடிந்து
கிளை ஒன்று விழுகிறது !
அங்கே ஒரு பாம்பு !
நபி நாயகம் நவில்கிறார் :
“மெய்யான
நம்பிக்கை கொண்டவன்
நல்லதோர் ஒட்டகம் போன்றவன் !
தன்னை ஒழுங்காய்ப் பேணும்
எஜமா னனை மட்டும்
எதிர்நோக்கும் அது
எப்போதும் !
வைக்கோல் இடுவான் அவன் !
முழங்காலைக்
கட்டிப் போடுவது
தாங்கிக் கொள்ளும் சட்டம் !
கட்டுப்பாடு நீக்கிய பின்
ஒட்டகம்
நடனம் ஆட விடப்படும்
அங்கியைக் கிழித்துக் கொண்டு
கடிவா ளத்தை
அறுத்துக் கொண்டு !
+++++++++++++
புதிய வடிவத்தில் தளிர்க்கும்
பயிரினம்
பூமியின் தளத்தில் !
கற்பனை செய்யாத
அற்புதச் செடிகள் முளைக்கும் !
நடனமிடும் ஒட்டகம்
அவை மேல் !
இந்தப் புதிய விதைகள் எல்லாம்
என்னதான் முயன்றாலும்
வேறோர் பரிதியை
விளக்கமாய்க் காட்டுவ தில்லை !
அவை மறைக்கும் அதனை !
ஆயினும்
முயற்சி அளிக்கும் மகிழ்ச்சி
சிப்பிக்குள் இருக்கும்
முத்துக்களை
ஒவ்வொன்றாய் வெளியே
எடுக்கும் போது !
++++++++++++++++++
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 6 2010)
- சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12
- அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
- துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
- மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்
- பார்சலோனா -3
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி
- முள்பாதை 46
- குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு
- MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organizes Monthly screening of Documentaries and Short films
- தந்தையும் தாயுமான அதிபர்.
- திலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா
- பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி
- முள்பாதை = வாசகர் கடிதம்
- பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு
- கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
- பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
- மேட்ரிக்ஸ் தமிழில்
- யெளவனம்
- அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!
- இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)
- உவமையும் பொருளும் – 1
- கோகெய்ன்
- இசட் பிளஸ்
- எரியாத முலைகள்
- மறுபடியும் அண்ணா
- காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.
- காதுள்ளோர் கேட்கட்டும்
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை
- குற்றமிழைத்தவனொருவன்
- சும்மாக் கிடந்த சங்கு
- கடிவாளம்
- இரண்டு கவிதைகள்
- தாணிமரத்துச் சாத்தான்…..!
- வனச்சிறுவனின் அந்தகன்