யெளவனம்

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

ப மதியழகன்


பால்யம் பறந்து சென்றது
இளமை உடலில் குடிகொண்டது
அதன் நறுமணம்
இளம் பருவத்தினரை
தன்பால் ஈர்த்தது
இயற்கையை மீறியெழும்
சக்தி உடல் முழுவதும்
நிரம்பியது
காண்பவையெல்லாம்
குதூகலமாய் இருந்தது
நடப்பவை எல்லாம்
கேளிக்கையாக இருந்தது
வேதனைகளும், வேடதாரிகளும்
அண்ட முடியாதபடி பெற்றோரின்
பாதுகாப்பு தெம்பைத் தந்தது
மாபெரும் பொக்கிஷம்
யெளவனம் என்பது
அதைக் கடந்த பிறகே தெரிந்தது
இளமையைத் தொலைத்து
துயரச் சுமை தாங்கியோரில்
ஒருவனாய் எனது காலம்
கழிந்தது.

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts