மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
நமது பூமி
++++++++++++++
“பலவீனம், கவலை ஆகியவற்றின் மெய்ப்பாடை விட்டுவிட்டு நமது கிழக்காசியர் வற்புறுத்துவதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.”
“எனது அன்புக்குரிய நாடு பாடுவது மகிழ்ச்சிக்காக இல்லாது, மக்களிடையே பயக் கொந்தளிப்பை உண்டாக்க என்னும் போது நான் வேதனைப் படுகிறேன்.”
கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)
++++++++++++++++++++++++++++
<< புவியே உனை நாடினேன் >>
++++++++++++++++++++++++++++
ஒருநாள் தெளிவான இரவின்
அமைதியில்
உனைக் காண வெளியில் வந்தேன்,
என் ஆத்மாவின் கதவையும்
ஜன்னலையும் திறந்து,
இதயத்தில்
இச்சையும் மோகமும் மிகுந்து !
விண்ணை நோக்கி
புன்னகை புரியும்
விண்மீன்களைப் பார்த்த
வண்ணம் நீ
இருந்தாய் ! என்
கால்கட்டுச் சங்கிலியை
கழற்றி எறிந்தேன் !
+++++++++++
என் ஆத்மா குடியிருக்கும் இடம்
உன் சூழ்வெளி ! அதன்
காரணம் நான் அறிந்தேன் !
என் ஆத்மாவின் ஆசைகள்
ஒன்றி யுள்ளன
உன் ஆசைகளில் !
என் ஆத்மாவின் அமைதி
ஓய்வெடுக்கும்
உன் அமைதியில் !
விண்மீன்கள்
உன் உடலில் தெளித்திடும்
பொன் தூசிகளில்
புதைந்திருக்கும் ஆத்மாவின்
பூரிப்பு !
++++++++++++
ஒருநாள் இரவு வானம்
சாம்பல் நிறத்தில்
இருந்த போது
களைத்துப் போனது
என் ஆத்மா !
கவலை யுற்றது
என் ஆத்மா !
உன்னை நாடி வந்தேன்
வெளியில் !
பூத வடிவில் தோற்றினாய்
நீயே !
புயல்களை ஆயுதமாய்ப்
போர்த்திக் கொண்டி ருந்தாய் !
கடந்த காலத்தோடு
நிகழ் காலம்
சண்டை இட்டது !
பழையவை இடத்தைப்
புதியவை
பற்றிக் கொண்டது !
பலவீனரைத் துரத்திக் கொண்டு
வலுத்தவர் வாழ்ந்து
வந்தார் !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 31, 2010)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)நமது பூமி கவிதை -33 பாகம் -3
- காலம் சிரித்துக்கொண்டே இருந்தது….
- வண்ணங்கள் பேசட்டும்
- ஞாயிறை போல் வாட்டும் ஒரு திங்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு குறுகிக் கொண்டு வருகிறது ! (கட்டுரை: 69-1)
- மானுடச் சித்திரங்கள் நீலகண்டனின் “உறங்கா நகரம்”
- காலச்சுவடு… வீழ்தலின் நிழல் .. ரிஷான் ஷெரீஃப் .. எனது பார்வையில்
- அகம் களித்த நாழிகைகள்
- பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்
- மண் சுமந்த மேனியர் – உதவித் திட்டம்
- காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு
- நேர்காணல்- இரண்டாம் இதழ் –
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி – 2010
- செம்மொழி மாநாட்டு – உலகளாவிய கவிதைப் போட்டி கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு பரிசு
- வனாந்திரம்
- இரண்டு கவிதைகள்
- தூங்கும் அழகிகளின் இல்லம்
- சூழ்நிலைக்கைதி
- பரிமளவல்லி – அத்தியாயம் 10. ‘போட்டோ ஷாப்’
- க்ருஷ்ண லீலை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -11
- சிம்ரன், ஜோதிகா, ஸ்னேஹா மற்றும் ஸ்ரீ மகா விஷ்ணு
- தண்ணீர் குளூக்கோஸ் மற்றும் ஜுஸ்
- பார்சலோனா -2
- ‘ஆரிய சமாஜம்’ என்கிற சிறு நூலையும் அதையொட்டிய வெ.சா.வின் கட்டுரையினையும் முன்வைத்து…
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 6
- காலமும் கனவுகளும் சென்னையின் கதை (1921)
- ஒரு திரைப்பட இயக்குனரின் சுயசரிதம்
- நினைவுகளின் சுவட்டில் (இரண்டாம் பாகம்)- (52)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நீராவிப் புகை இழைகள் கவிதை -17 பாகம் -2
- அசையும் கை நிழல்..
- முதுமையெனும் வனம்
- குடியிருப்புக்கள்…
- முள்பாதை 45
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 11