இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

ஸ்ருதி ரமணி


; விரட்டி விடுவேனோ என்கிற அச்சம்

பார்வையில் படபடக்க – வால் உதறி உதறிப் பருக்கைகளைப் பொறுக்குகிறது அது! ஓடி விடுமோ என்கிற ஐயம் என்னுள் ஊற்றெடுக்க தயக்கமாய் ஒதுங்கிச் சிலையாய்ச் சமைகிறேன் நான் என்னின் சிறு அசைவும் அதன் நிம்மதியைக் குலைக்கும் உணவுக்காக – இந்தப் போராட்டம் நிகழலாமா? அணிலே! பயப்படாதே! உன்னை இன்று காலையில் பார்க்கலாம் என்ற ஆசையில்தான் நேற்றிரவு படுக்கைக்குப் போனேன் நான்! இரவு முழுக்க உன் நினைப்பில்தான் பொழுதை உதைத்து விரட்டினேன்! என்னைப் போலத்தான் நீயும் இருந்திருக்க வேண்டும் இல்லையென்றால் புலர்காலையில் கணம் தப்பாமல் கிளை தாவி இப்படி ஓடி வருவாயா? பருக்கையாய்ப் பிரித்து பரவலாய்த் தூவியுள்ளேன் பரபரப்பின்றி பக்குவமாய்ப் பசி போக்கு! உனக்கு நான் – எனக்கு நீ பரஸ்பர நேயத்தில்தான் வாழ்க்கையே நகர்கிறது!! ———————
பயணம்

தவறாமல் வருகிறான் ஒருவன் ஞாயிறன்று அவன் நம்பிக்கை தளராத நயமான ஓசை ஏற்ற இறக்கத்தோடு நீள் தெருவில் நெடுக மோதி அலைகிறது அவன் குரல்! எல்லோருக்கும் வாழ்க்கை ஏதோவோர் நம்பிக்கையின்பாற்பட்டு! தவறாமல் வருகிறான் ஒருவன் ஞாயிறன்று அவன்! செருப்ப+! பழைய செருப்ப+!! காலனி ஓசை கானலாய்க் கரைய கலங்கிப் போகிறது மனசு! இன்னும் அவன் போக வேண்டிய தொலைவு எவ்வளவோ? எப்பொழுது முடியுமோ அவனின் இன்றைய பொழுது? ———————————-

Series Navigation

author

ஸ்ருதி ரமணி

ஸ்ருதி ரமணி

Similar Posts