ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++
நீராவிப் புகை இழைகள்
+++++++++++++++++++
நிரப்பிடும் குளிக்கும் இடத்தை
நீராவி !
விழித்திடும் சுவரில் உறைந்த
துளிகள் !
திறக்கும் ஈரக் கண்கள்
வட்டமாய் !
சுயக் காதல் விழிகள்
நோக்கும் வெகு தூரம் !
புதுச் செவிகள்
எக்கதையும் கேட்க விழையும் !
நண்பரைப் போல்
வடிவங்கள் எல்லாம்
நடனங்கள் ஆடும் நீரில்
ஆழமாய் பாய்ந்தும்
மேல் எழுந்தும்
மீண்டும் குதித்தும் !
++++++++++++++++
முற்றத்தில் நீராவி கசியும்
மறுபடி கேட்கும் அதன் அரவம் !
ஒரு மூலையில் துவங்கி
ஓடும் அடுத்த மூலைக்கு
சிரித்த வண்ணம்
நீராவி !
எவரும் கூர்ந்து நோக்கார்
எவ்விதம் நீராவி
ஒவ்வோர் மனத்தின் ரோஜாவைத்
திறக்கிற தென்று !
பிச்சைக் குவளையை
எப்படி நாண யங்களால்
நிரப்பிக் கொள்வது ?
நீண்ட கூடை ஒன்று
நிரம்பிடும் நன்கு உடனே
நீர் விழைவது போல !
+++++++++++++
நீதி வழங்கும் நெறியாளரும்
தவறு செய்த மானிடரும்
தீர்ப்பை மறந்து
சென்றிடுவார் !
ஒருவர் எழுந்து நிற்பார்
உரையாற்ற !
எதிரே இருக்கும்
மரமேஜை புனிதம் அடையும் !
அவ்விநாடி மதுக்கடை
ஆக்கப் படும் ஒயினால் !
மதுவைக் குடிப்பான்
மயக் கத்தில் மாய்ந்தவன் !
++++++++++++++++++
அடுத்து நீராவி
ஆவி யாக மறையும் !
வடிவங்கள்
சுவரில் பதிந்து கொள்ளும்
வெறுமை ஆயின விழிகள்
நேர் கோடாகும் செவிகள் !
வெளிப்புறத்
திரையில் நிகழும் அக்காட்சி !
பறவையின் குரலும்
சருகுகள் சலசலப்பும் கேட்கும்
தோட்டத்தில் !
எழுந்து நிற்போம் இந்த சத்தத்தில்,
காற்றாய் மாறுவோம் !
என்ன நடக்குமென
எவர் சொல்ல இயலும்
எல்லாரும் பேனாவை
கோடி முறை மைச்சிமிழில்
நாடி விடும் போது ?
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 30, 2010)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)நமது பூமி கவிதை -33 பாகம் -3
- காலம் சிரித்துக்கொண்டே இருந்தது….
- வண்ணங்கள் பேசட்டும்
- ஞாயிறை போல் வாட்டும் ஒரு திங்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு குறுகிக் கொண்டு வருகிறது ! (கட்டுரை: 69-1)
- மானுடச் சித்திரங்கள் நீலகண்டனின் “உறங்கா நகரம்”
- காலச்சுவடு… வீழ்தலின் நிழல் .. ரிஷான் ஷெரீஃப் .. எனது பார்வையில்
- அகம் களித்த நாழிகைகள்
- பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்
- மண் சுமந்த மேனியர் – உதவித் திட்டம்
- காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு
- நேர்காணல்- இரண்டாம் இதழ் –
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி – 2010
- செம்மொழி மாநாட்டு – உலகளாவிய கவிதைப் போட்டி கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு பரிசு
- வனாந்திரம்
- இரண்டு கவிதைகள்
- தூங்கும் அழகிகளின் இல்லம்
- சூழ்நிலைக்கைதி
- பரிமளவல்லி – அத்தியாயம் 10. ‘போட்டோ ஷாப்’
- க்ருஷ்ண லீலை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -11
- சிம்ரன், ஜோதிகா, ஸ்னேஹா மற்றும் ஸ்ரீ மகா விஷ்ணு
- தண்ணீர் குளூக்கோஸ் மற்றும் ஜுஸ்
- பார்சலோனா -2
- ‘ஆரிய சமாஜம்’ என்கிற சிறு நூலையும் அதையொட்டிய வெ.சா.வின் கட்டுரையினையும் முன்வைத்து…
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 6
- காலமும் கனவுகளும் சென்னையின் கதை (1921)
- ஒரு திரைப்பட இயக்குனரின் சுயசரிதம்
- நினைவுகளின் சுவட்டில் (இரண்டாம் பாகம்)- (52)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நீராவிப் புகை இழைகள் கவிதை -17 பாகம் -2
- அசையும் கை நிழல்..
- முதுமையெனும் வனம்
- குடியிருப்புக்கள்…
- முள்பாதை 45
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 11