ஊழ்

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

ப.மதியழகன்,


ககனவெளில் யோகதண்டம்
அந்தகாரத்தில் பேயுருவம்
தையல் மகளிர் குரலோசை
ஏகாந்தத்தில் நிறைவு கொள்ளல்
துகிலிகை எழுதா பாடுபொருள்
சல்லியம் துளைத்த பிதாமகர்
சன்னமான புல்லாங்குழலிசை
திலகமில்லாத பெண்டிரின் துக்கம்
தீக்ஷண்யமில்லாத அரசன்
அசூயை கொள்ளும் துணைவி
உபாயமற்ற சமாதானம்
துடுப்பில்லாத பரிசல் சவாரி
நுகத்தடியான குடும்பச்சுமை
விக்கினம் கொடுக்கும் சுற்றம்
துகிலில்லாத வறுமை
குவலயம் குப்பை மேடுகளாகும் விந்தை
காலாதீதம் உணர்த்தும் பருந்தின் வேட்டை
குழாமற்ற கல்யாண ஊர்வலம்
குயுக்தி கொண்ட அரசபரிபாலனம்
துயில் கொள்ளாத நீண்ட இரவு
தயை இல்லாத குருமார்கள்
கோடாங்கி வராத வைகறைப் பொழுது
ஊழ் வழியே உலக வாழ்வு.

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts