மெளனவெளி

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

ப மதியழகன்


இடைவெளி
உடல்களுக்கு
மெளனம் ஆயுதமா
பேசாமல் பேசுவது
எதனால்? எப்படி?
வார்த்தைகளுக்கு ஒரு பொருள்
பேசாததற்கு பல பொருள்
பேச்சு வேண்டாம்
மெளனம் போதும்
எவ்வளவு அர்த்தங்களை
தாங்கி நிற்கிறது
இந்த நிசப்தம்
அச்சமயத்தில் ஒரு பூனை
கண்ணாடி தம்ளரை
தள்ளிவிட்டு
நிசப்தத்தைக் களைத்தது
சப்தம் இடியோசை போல
எங்களிருவரையும் தாக்கியது
மெளனவெளி – இனி அங்கு
செல்லக்கூடுமோ
எங்களது ஆன்மாக்கள்
காத்திருப்போம் காதலில்
கரைவதற்கு
மெளனத்தில் இணைவதற்கு.

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts