மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“குருதி ஆறுகள் ஆகிவிடும்
ஒருநாள்
ஒயின் மது ஓடும் நதிகளாய் !
பனித்துளி களாய்ப்
புவித்தளம் மீது பொழிந்த
கண்ணீர்த் துளிகள் விளைவிக்கும்
ஒருநாள்
நறுமணப் பூக்களை !
இருக்கை விட்டுப் பிரிந்த
ஆத்மாக்கள்
ஒருங்கு கூடிப்
புதுத் தொடு வானாய் அமையும்
பொழுது புலர்ச்சியில் !
நியாயத்தையும்,
நீதியின் காரணத்தையும்
அடிமைச் சந்தையில்
விலை கொடுத்து
வாங்கியதாய் உணர்வான்
மனிதன் !
தனக்குள்ள உரிமைக்காக
ஊழியம் செய்து செலவழிப்பவன்
ஒருபோதும் தான்
இழப்ப தில்லை யெனப்
புரிந்து கொள்வான்.”
கலில் கிப்ரான். (The Giants)
++++++++++++++++++++++++++
<< ஓ இரவே ! >>
++++++++++++++++++++++++++
நீயே பரிபூரண அமைதி !
சொர்க் கத்தில்
புத்துயிர் பெற்ற ஆன்மாக்கள்
மர்மங்களை வெளியாக்கும் !
பயனுக்கும் வியப்புக்கும் இடையே
பகற் பொழு தானது
ஆத்மாக் களை
ஆட்டு விக்கும் ஒரு கொந்தளிப்பு !
நீயே நீதிக் களம் ! அது
இழுத்துச் செல்லும்
பலவீனர் கனவுகள்
உறங்கும் குகைப் பொந்துக்கு !
வலுவானவர் நம்பிக்கை யாவும்
ஐக்கியம் அடைவதற்கு !
++++++++++++
நீயே கருணை வேந்தன் !
ஏழைகள் இதயத்தைக் கவர்ந்து
நேச ஆட்சிக்குள்
நெஞ்சங் களைப் புகுத்துவோன் நீ !
காதலர் உள்ளத்தின் இச்சைகள்
அடைக்கலம் அடையும் உனது
உடைக்குள் !
அப்பாவி மக்கள்
உதிர்க்கும் கண்ணீர்த் துளிகள்
உனது பாதங்களை மூழ்க்கி விடும்
பனித்துளிகளாய் !
பசும்புல் வனாந்திர
நறுமணம் கமழும்
உந்தன் உள்ளங்கையில்
அந்நியர் தமது
தாகத்தைத் தீர்க்க எளிதாய்ப்
பாதை காண்பார் !
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 12, 2010)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -4
- சிங்கராயர் எனும் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் ஆளுமை!
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை 1
- சூரிய சக்தியில் முதலில் மனிதன் இயக்கி ஒருநாள் பறந்த வானவூர்தி (ஜூலை 8, 2010)
- தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் கலைவிழா
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 4
- சமபாதத்தில் உறைந்த இந்திய நடனஙக்ள்: (2)
- மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகள் (2000ஆம் ஆண்டுகள்)
- இவர்களது எழுத்து முறை – 1 லா.ச.ராமாமிர்தம்
- பழமலையும், ப க பொன்னுசாமியும்….
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -23
- மெட்ரோ ப்ராஜெக்ட் – “மெட்ரோ பாப்கார்ன்” – PERFORMANCE REPORT
- மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ்
- தமிழ்செல்வனை மறுத்து புதிய மாதவி
- சென்ற வாரம் திராவிடம் பற்றிய புதிய மாதவியின் கடிதத்தை படித்ததில் சில கேள்விகள்
- புதிய மாதவியின் கடிதத்தில் சொல்லாமல் விட்டது.
- கவிஞர்கள் கலாப்ரியா மற்றும் இளம்பிறை ஆகியோருக்கு சிற்பி இலக்கிய விருது
- கடிதம்: திராவிட இனவாதம், சாதி அமைப்பு குறித்து
- தமிழ்ச்செல்வனுக்கு புதியமாதவியின் எதிர்வினை குறித்து
- களம் ஒண்ணு கதை பத்து – 9 இருள் மணக்கும் நிழல்
- சங்கதி என்னவாயிருக்கும்?
- காக்கையை வரைந்துகொண்டிருக்கும் சிறுமி
- துப்புரவு
- மறுபடியும் ரகு
- தொட்டுப் பாக்கணும்
- குடைராட்டினம்
- எழுதப்படாத கவிதை
- முள்பாதை 38
- பரிமளவல்லி தொடர் , அத்தியாயம் 3. அறுபதுவயதுக் கன்னி
- இஸ்லாமிய மன்னர்களின் வரலாறும் மக்களின் வரலாறும்
- வேத வனம் விருட்சம் -95
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) வசந்த கால மயக்கம் கவிதை -13 இளவேனிற் காலம்
- முகத்தினைத் தேடி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -2
- நடுமுள்
- மெளனவெளி
- நஞ்சு பாசனம்
- யாரோ ஒருவரின் காலடி ஓசைகள் …!