ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++++++++
இறைவன் உன்னோடு உள்ளான்
++++++++++++++++++++++++++++++
என் இனிய காதலி !
இந்த மர்மத்தை விளக்கும்
எனக்கோர் நிகழ்ச்சியைச் சொல்
இப்போது !
எப்படிச் சுதந்திர மாய் நாம்
இயங்கி வந்தோம் !
ஆயினும் நாம்
வலிந்து செயற் பட்டோம் !
முடக்கு வாதத்தில் ஒரு கரம்
நடுங்கிடும் !
ஆடிடும் மறு கரம்
அதனைத் தடுக்க முனையும்
தருணத்தில் !
+++++++++++
நரம்பு நடுக்கம்
இரண்டும்
இறைவனால் வந்திடும் !
ஆனால் உனக்குள்ளது
ஒன்றின் மேல் குற்ற உணர்வு !
ஆனால்
அடுத்த கரம் பற்றி நீ
விடுப்ப தென்ன ?
இவை ஞான வினாக்கள் :
ஆன்மா நெருங்கும் அவற்றை
வேறு முறையில் !
ஓமாரின் விஞ்ஞான நண்பன்
பூல்-ஹாக்கம்*
எளிய பிரச்சனைகள் தீர்வுகளில்
இருப்பார் நிபுணராய் !
ஆனால் ஓமாரை
ஞான ஒளிச் சிந்தனையில்
வியந்து
காண முடிவதில்லை விஞ்ஞானி !
புத்தகத் துக்கு மீள்கிறேன்
இப்போது.
இறைவன் உன்னோடு உள்ளான்
எங்கு நீ இருப்பினும் !
ஆனாலும்
நான் எப்போ தவனை விட்டு
நழுவிச் சென்றேன் ?
++++++++++++
அறிவின்மை என்பது
இறைவன் சிறைக் கோட்டை !
அறிவுப் புலமை
இறைவனின் மாளிகை ! நாம்
உறங்கிக் கிடப்பது
இறைவன் மெய்மறந்த நிலையில் !
விழித்தெழுவது நாம்
இறைவன் திறந்த கரங்களில் ! நாம்
அழுது கொண்டிருப்பது
இறைவன்
மழை பொழியும் போது !
புன்னகை செய்வது நம் இறைவன்
மின்னல் வெடிகளில் !
நமக்குள்
சண்டை யிடுவதும் நாம்
சமாதானம் செய்வதும்
கடவுளின் உள்ளே தான்
நடக்கின்றன !
+++++++++++++++
அப்படி யாயின்
இப்படிப் பல்வேறு சிக்கல்கள்
பின்னிய உலகில்
நாமெல்லாம் யார் சொல்வீர் ?
ஆதி காலத்தில்
மெய்ப்பாடு நேர்மைக் கோடாகத்
தோன்றியவர்
அல்லாஹ் இறைவன் !
நாமெல்லாம் வெறும்
காலிப் பாத்திரம் !
சூனியம் !
*****************
பூல்-ஹாக்கம்* (Scientist Bu’l-Hakam)
*****************
(தொடரும்)
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 21, 2010)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -1
- ஞாநியுடன் ஒரு கலந்துரையாடல் – நியூயார்க் – நியூஜெர்ஸி
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2
- கவிதை கூறும் சிறுகதை: எதிர்காலச் சித்தன்!
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -20
- கனவும் நனவும்
- சூழ்வெளிச் சூடேற்றத்தில் சூரிய வடுக்களின் (Solarspots) பங்கு என்ன ? [கட்டுரை: 1]
- குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது எப்படி?
- சிறுபாணாற்றுப்படையில் புலவரின் பண்பும், புரவலரின் மாண்பும்
- எழுத்தாளர் விழாவும் புலம்பெயர் எழுத்தாளர்களும்
- சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை
- நம்பிக்கைச் சுடர் பாரதியின் சுய சரிதையில் தன் வெளிப்பாடுகள்
- தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை
- ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள்
- ஸ்ரீமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு:…
- கிரிஜா ராகவன் கடிதத்தை ஒட்டி சில சிந்தனைகள்
- பேராசிரியர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மற்றும் தியாகி கக்கன் அவர்களது சகோதரர் விஸ்வநாதன் கக்கன் ஆகியோர் உரை
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தேழு
- வேத வனம் விருட்சம் 92
- முள்பாதை 35
- கனம் 1 கதை 10 – வரிசை 6 ஆதலினால் காதலே
- பழைய வாத்தியார்
- ஆட்டோ பயோகிராஃபி ஆஃப் சைல்ட் – 3
- எனக்கான ‘வெளி’
- போதி மரம்
- சாதியும், கணக்கெடுப்பும் –
- முஸ்லிம்தலித் – சாதிய கணக்கெடுப்பின்வழி
- நினைவுகளின் சுவட்டில் – (50)
- நாளை தேசத்தைக் காக்க இன்று கடப்பாவைக் காப்பாற்றுவோம்
- ஊமையர்களின் கதையாடல்
- ஒவ்வொரு விடியலும்….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -2
- ஒலியும் மொழியும்
- தவித்துழல்தல்
- நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் – ஜமாலன் – புத்தக அறிமுகம்