கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -1 கடவுளின் படைப்பு வேலை

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++++++
கடவுளின் படைப்பு வேலை
++++++++++++++++++++++++++++++

மனிதன் செய்யும் வினைகட்கும்
கடவுள் புரியும்
இயக்கங் களுக்கும்
இடையே உள்ள வேற்பாடுகளை
சிந்தித்துப் பார் !
அடிக்கடி நாம் கேட்கிறோம் :
“அப்படி ஏன் செய்தாய் ?”
அல்லது
“இப்படி ஏன் நடந்தாய்”
என்று !
நாம் செய்ய முனைந்தவை
நாமின்று செய்து
முடித்தவை எல்லாம்
கடவுளின்
படைப்பு வேலை கள்தான் !

+++++++++++

பார் நீ பின்னோக்கி
நம் வாழ்வில்
நேர்ந்த நிகழ்வுகளை எல்லாம்
ஆராய்வோம் !
வேறு முறை நோக்கொன்றும்
உள்ளது
ஒரே காட்சி முறையில்
முன்னும் பின்னும் ஆராய்வது;
அவற்றைக் காரண மோடு
புரிந்து கொள்வது
அரிது !
இறைவன் ஒருவனே அதனை
அறிவான்.

+++++++++

கடவுளுக்குப் புரியும் அது !
விழுவதைத் தூண்டுவதாய்ச் சொல்லி
நழுவிச் செல்லும் சாத்தான் !
ஆயினும்
ஆதாம் சொல்வான் கடவுளிடம்
“யாமிதை விரும்பிச் செய்தது
எமக்காகத் தான்”
இந்தப் பாப ஒப்புதலுக்குப்
பிறகு அவனை
இறைவன் கேட்டார் :
இவை அனைத்தும் எனது
கட்டுப் பாட்டுக்கு
உட்பட்டதால்
ஏனதைக் காரணம் காட்டி
மானத்தைக்
காத்திட வில்லை ?

++++++++++++

“அச்சமே காரணம்” என்பான்
ஆதாம் !
மரியாதை யோடு வாழ
விரும்பினேன் !
பிறருக்கு
மதிப்பளித்து வாழ்பவன்
தனது
மதிப்பைப் பெறுவான் !
இன்பச் சூழ்நிலை அமைப்பவன்
இனிய தின்பண்டம்
பெறுவான் !
நல்வழி ஆடவர்
நன்னெறி மாதரைக் கவர்ந்திட
முனைவார் !
உன் நண்பனை மதித்திடு !
கடுமையாய் நீ நடத்தினால்
நடப்ப தென்ன பார் ?

(தொடரும்)
***************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 14, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts