ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++++++++
கடவுளின் படைப்பு வேலை
++++++++++++++++++++++++++++++
மனிதன் செய்யும் வினைகட்கும்
கடவுள் புரியும்
இயக்கங் களுக்கும்
இடையே உள்ள வேற்பாடுகளை
சிந்தித்துப் பார் !
அடிக்கடி நாம் கேட்கிறோம் :
“அப்படி ஏன் செய்தாய் ?”
அல்லது
“இப்படி ஏன் நடந்தாய்”
என்று !
நாம் செய்ய முனைந்தவை
நாமின்று செய்து
முடித்தவை எல்லாம்
கடவுளின்
படைப்பு வேலை கள்தான் !
+++++++++++
பார் நீ பின்னோக்கி
நம் வாழ்வில்
நேர்ந்த நிகழ்வுகளை எல்லாம்
ஆராய்வோம் !
வேறு முறை நோக்கொன்றும்
உள்ளது
ஒரே காட்சி முறையில்
முன்னும் பின்னும் ஆராய்வது;
அவற்றைக் காரண மோடு
புரிந்து கொள்வது
அரிது !
இறைவன் ஒருவனே அதனை
அறிவான்.
+++++++++
கடவுளுக்குப் புரியும் அது !
விழுவதைத் தூண்டுவதாய்ச் சொல்லி
நழுவிச் செல்லும் சாத்தான் !
ஆயினும்
ஆதாம் சொல்வான் கடவுளிடம்
“யாமிதை விரும்பிச் செய்தது
எமக்காகத் தான்”
இந்தப் பாப ஒப்புதலுக்குப்
பிறகு அவனை
இறைவன் கேட்டார் :
இவை அனைத்தும் எனது
கட்டுப் பாட்டுக்கு
உட்பட்டதால்
ஏனதைக் காரணம் காட்டி
மானத்தைக்
காத்திட வில்லை ?
++++++++++++
“அச்சமே காரணம்” என்பான்
ஆதாம் !
மரியாதை யோடு வாழ
விரும்பினேன் !
பிறருக்கு
மதிப்பளித்து வாழ்பவன்
தனது
மதிப்பைப் பெறுவான் !
இன்பச் சூழ்நிலை அமைப்பவன்
இனிய தின்பண்டம்
பெறுவான் !
நல்வழி ஆடவர்
நன்னெறி மாதரைக் கவர்ந்திட
முனைவார் !
உன் நண்பனை மதித்திடு !
கடுமையாய் நீ நடத்தினால்
நடப்ப தென்ன பார் ?
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 14, 2010)
- ஹெல்மெட்டின் பாதுகாப்பு
- ஜப்பான் விண்ணுளவி ஹயபுஸா முரண் கோள் மண்ணை எடுத்துப் பூமிக்கு மீண்டது (Japan’s Space Probe Hayabusa Returns to Earth with Aster
- சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ்- தொடரும் விவாதம்
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தாறு
- நதியின் பாடல்.
- யாருக்கும் தெரியாது
- சுங்கை நதியும் சொல்லப்படாத கிழக்குக்கரையின் கதைவெளியும்
- முதலில் நல்ல மதிப்பெண் பெற்று படிக்கும் குழந்தைகள் போகப்போக சரியாக படிக்காதது ஏன்?
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -19
- மலர் மன்னன் கட்டுரை: ஹிந்துக்களா அவர்கள் எங்கே இருக்கிறார்கள் பற்றி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -1 கடவுளின் படைப்பு வேலை
- சிட்டு க்குருவி
- பூனைக் கவிதைகள்
- ஏ.தேவராஜன் 5 கவிதைகள்
- ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 2 – சைப் டைட்டில் : நித்திய சோதனை
- முள்பாதை 34
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 இறுதிப் பாகம்.
- களம் ஒன்று கதை பத்து – 5 சுரப்பி
- சக மொழிபெயர்ப்பாளர் தோழர்.சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி
- நினைவுகளின் சுவட்டில் – (49)
- போபால் – உங்கள் செயல் வேண்டி
- நிலவும், மலையும், நிரந்தர தெய்வீகமும்
- ரிஷியின் கவிதைகள்.
- கண்ணாமூச்சி
- வேத வனம் விருட்சம் 90 –