ரிஷி
ரிஷியின் கவிதைகள்.
1) மாறும் மதிப்பீடுகள்
6 போடக் கற்றுத்தரப்பட்டது குழந்தைக்கு
ஆகச் சிறிய நூலின் முனையில் ஒரு பூஜ்யத்தைக் கட்டித்
தொங்கவிட்டது குழந்தை.
8 போடக் கற்றுத்தரப்பட்டது.
சம அளவு அல்லது சற்றே சிறியதும் பெரியதுமான
இரண்டு பூஜ்யங்களை ஒன்றன்மீது ஒன்றாக
அடுக்கிவைத்து
கைதட்டிக் குதூகலித்தது குழந்தை.
10 போடக் கற்றுத்தரப்பட்டது.
ஒரு சிறிய தடுப்புச்சுவர் எழுப்பி
பூஜ்யம் உருண்டோடிவிடாமல் பாதுகாத்தது குழந்தை.
பெரியவர்களின் கணக்கில் பூஜ்யம்
அதனளவில் மதிப்பற்றது.
பிள்ளைகளுக்கோ விலைமதிப்பற்றது!
*
2) கண்டதே காட்சி-கொண்டதே கோலம்
இறுக்கமாகக் கண்களை மூடிக்கொண்டிருந்த பூனை
இருள் பொறுக்க மாடாமல்
திடீரென ஒரு நாள் விழித்துப் பார்த்தது.
கண்பறிக்கும் வெளிச்சங்களில் தெரிந்த
எண்ணுலகங்களில்
சின்னஞ்சிறு குருவிகள், சிற்றெறும்புக்கூட்டங்கள்
தொடங்கி
பென்னம்பெரிய யானை, டினோசார் எல்லாமும்
அதனதன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தன.
தன்னைத் தாண்டி உலகம் இயங்குவதைக் கண்டு
செயலிழந்துபோன பூனை
மதில் மீது தாவியேறிக்கொண்டது.
போய்வந்தவாறு
இப்போதும்
அங்கேயே
அங்குமிங்கும்.
3) அரைக்கண காலவெளிகளும்
உன் அறைகூவல்களும்
கொஞ்சம் பொறு
தட்டாமாலை சுற்றிக்கொண்டிருக்கிறேன்
இன்னமும் நிலா வரவில்லை.
அழைத்தபடியிருக்கிறேன்.
விண்மீனின் கண்சிமிட்டலைக் கண்டு ரசித்தபடி
அண்ணாந்திருக்கிறேன்….
கண்ணீர் பாதையை மறைக்கிறது.
தத்தளித்துக்கொண்டிருக்கிறேன்.
கடும்புயல்-வெள்ளத்தில்
கலகலத்துச் சரிந்தவண்ணமிருக்கிறேன்
காலன் எதிரில் கையறுநிலையில்
மண்டியிட்டவாறு….
’கிட்டாதாயின் வெட்டென மற’வின் உட்பொருளைத்
துருவிக்கொண்டிருக்கிறேன்.
எட்டாக்கனி எதற்கெல்லாம் குறியீடாகும் என்பதையும்.
உடனடியாக எதிர்வினையாற்றவில்லையென்பதால்
உன் அறைகூவலைக்கேட்டு பயந்துவிட்டதாக அர்த்தமல்ல.
4) விம்மல்களும் தும்மல்களும் வேறுநூறும்…
அணில் வால் ஆணா? பெண்ணா?
மணலின் மென்மை அல்லது மொரமொரப்பு?
காற்றின் உயிர்ப்பு? கால நீட்சி? கவின் நிலக்காட்சி?
கல் யானை? கல்லுக்குள் தேரை?
வலக்கைக்கும் இடக்கைக்குமுள்ள தொடுபுள்ளிகளும்,
தொலைவுகளும்?
தருணங்கள்?
பரிவு? புரிதல்? நிறைவு? விரைவு?
சிட்டுக்குருவியின் குட்டிமூக்கு?
தொட்டிநீருக்குள் மூழ்கிய மூச்சுத்திணறல்?
நோய்? நோயின் வலி? வலியோலம்? காலம்? மேலும்_
பாசம்? மோசம்? நாசம்? வேஷம்? ரோஷம்? சந்தோஷம்?
உம் எம் நம் தம்
விம்மல்களும் தும்மல்களும், வேறுநூறும்….
(இம்மென்றால் இருக்குமோ சிறைவாசம்?)
வேண்டும்போது உமையொருபாகன்;
வேண்டாதபோது காலைத்தூக்கியாடி
தாட்சாயிணியை அவமானப்படுத்திய துக்கிரித்தாண்டவக்கோன்.
சிவனேயென்றிருக்க வழியில்லை
சிவனுக்கும்!
*
- ஹெல்மெட்டின் பாதுகாப்பு
- ஜப்பான் விண்ணுளவி ஹயபுஸா முரண் கோள் மண்ணை எடுத்துப் பூமிக்கு மீண்டது (Japan’s Space Probe Hayabusa Returns to Earth with Aster
- சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ்- தொடரும் விவாதம்
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தாறு
- நதியின் பாடல்.
- யாருக்கும் தெரியாது
- சுங்கை நதியும் சொல்லப்படாத கிழக்குக்கரையின் கதைவெளியும்
- முதலில் நல்ல மதிப்பெண் பெற்று படிக்கும் குழந்தைகள் போகப்போக சரியாக படிக்காதது ஏன்?
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -19
- மலர் மன்னன் கட்டுரை: ஹிந்துக்களா அவர்கள் எங்கே இருக்கிறார்கள் பற்றி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -1 கடவுளின் படைப்பு வேலை
- சிட்டு க்குருவி
- பூனைக் கவிதைகள்
- ஏ.தேவராஜன் 5 கவிதைகள்
- ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 2 – சைப் டைட்டில் : நித்திய சோதனை
- முள்பாதை 34
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 இறுதிப் பாகம்.
- களம் ஒன்று கதை பத்து – 5 சுரப்பி
- சக மொழிபெயர்ப்பாளர் தோழர்.சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி
- நினைவுகளின் சுவட்டில் – (49)
- போபால் – உங்கள் செயல் வேண்டி
- நிலவும், மலையும், நிரந்தர தெய்வீகமும்
- ரிஷியின் கவிதைகள்.
- கண்ணாமூச்சி
- வேத வனம் விருட்சம் 90 –