ஏ.தேவராஜன் 2 கவிதைகள்

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

ஏ.தேவராஜன்


ஏ.தேவராஜன் 2 கவிதைகள்

1
ஆராதித்த முகத்தை
என்ன செய்யலாம் ?

சுவரில் தேய்க்கலாம்
சுடுநீரில் துவைக்கலாம்

கீறலாம் கிழிக்கலாம்
தோலுரித்துக் கத்தரிக்கலாம்

முகப் பிண்டத்தை
மண்ணில் புதைக்கலாம்

குளித்தெழுந்து
பெருமூச்செறிந்து நீ
உறங்கலாம்

உறக்கத்தைக் கலைத்து
உனை ஆராதிக்கும்
உள் முகத்தை
வேறென்ன செய்யலாம் ?
2

வனப் பகுதியின்
வழி தவறிய
இருண்ட பயணத்தைப் போன்று
எல்லாத் துக்கங்களிலும்
நான் மறுதலித்த
சிறு வயதுக் கடவுள்தான்
கைத்தாங்கலாகக்
கூட்டிச் செல்கிறார்
இருட்டின் நிறத்தில்…

வனம் மீண்ட போழ்தில்
மீண்டும் காணாமல் போகிறார்
கடவுள்

Series Navigation

author

ஏ.தேவராஜன்

ஏ.தேவராஜன்

Similar Posts