கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



எரிந்தழியும் மெழுகுவர்த்தி

எரிந்த ழியவே
உருவாக்கப் பட்டிருப்பது
ஒரு மெழுகு வர்த்தி !
அந்த அழிவுக் கோலச்
சந்தர்ப் பத்தில்
நிழல்
விழுவ தில்லை !
சரண் புகும் மெழுகு வர்த்தி
எரி நாக்கைத் தவிர
வேறு ஒன்றில்லை !
நல்லதும், தீயதும் எதுவென
அறியாமல்
தானே மாய்ந்திடும்
தண்டு மெழுகு வர்த்தியைக்
கண்ணால் பார் !
பெருமையும், சிறுமையும்
ஒருங்கே தேடிச் செல்வோம் !
முன்பே இதைச்
சொல்லி யிருக்கிறேன் :
கைத் தொழில் பயில் வதற்கு
இல்லாத ஒன்றைத்
தேடுபவன்
கலைத் தச்சன்!

+++++++++++

கூரை இiடிந்து விழுந்த
பாழும்
குழியைத் தேடிப் போவான்
கட்டடக் கலைஞன் !
காலிப் பானையைத் தேடி
கையில் எடுப்பான்
நீர் பரிமாறி வருபவன் !
ஓர் கதவு மில்லா
வீடு தேடிப் போவான்
வேலை வேண்டும் தச்சன் ஒருவன் !
வேலைக் காரர் எல்லாம்
காலி யாக இருப்ப வற்றைப்
பூர்த்தி செய்ய
வேர்த்து விரைவார் !
ஆதலால் இல்லாமை ஒன்றே
ஊதிய எதிர்பார்ப்பு
நம்பிக்கை !
தவிர்த்திட நினைத் திடாய்
அவற்றை எல்லாம் !
நீவீர் வேண்டுவது
நிறை வேறும் அவற்றால் !

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 24, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts