ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
—
எரிந்தழியும் மெழுகுவர்த்தி
—
எரிந்த ழியவே
உருவாக்கப் பட்டிருப்பது
ஒரு மெழுகு வர்த்தி !
அந்த அழிவுக் கோலச்
சந்தர்ப் பத்தில்
நிழல்
விழுவ தில்லை !
சரண் புகும் மெழுகு வர்த்தி
எரி நாக்கைத் தவிர
வேறு ஒன்றில்லை !
நல்லதும், தீயதும் எதுவென
அறியாமல்
தானே மாய்ந்திடும்
தண்டு மெழுகு வர்த்தியைக்
கண்ணால் பார் !
பெருமையும், சிறுமையும்
ஒருங்கே தேடிச் செல்வோம் !
முன்பே இதைச்
சொல்லி யிருக்கிறேன் :
கைத் தொழில் பயில் வதற்கு
இல்லாத ஒன்றைத்
தேடுபவன்
கலைத் தச்சன்!
+++++++++++
கூரை இiடிந்து விழுந்த
பாழும்
குழியைத் தேடிப் போவான்
கட்டடக் கலைஞன் !
காலிப் பானையைத் தேடி
கையில் எடுப்பான்
நீர் பரிமாறி வருபவன் !
ஓர் கதவு மில்லா
வீடு தேடிப் போவான்
வேலை வேண்டும் தச்சன் ஒருவன் !
வேலைக் காரர் எல்லாம்
காலி யாக இருப்ப வற்றைப்
பூர்த்தி செய்ய
வேர்த்து விரைவார் !
ஆதலால் இல்லாமை ஒன்றே
ஊதிய எதிர்பார்ப்பு
நம்பிக்கை !
தவிர்த்திட நினைத் திடாய்
அவற்றை எல்லாம் !
நீவீர் வேண்டுவது
நிறை வேறும் அவற்றால் !
*****************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 24, 2010)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11
- புளுடோவைக் கடந்து கியூப்பர் வளையத்தை உளவப் போகும் புதுத் தொடுவான் விண்கப்பல் ! (கட்டுரை -1) (New Horizon Spacecraft)
- நள்ளிரவின் பாடல்
- மழைகள்
- ரிஷியின் கவிதைகள்:
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1
- குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது
- முதல் சம்பளம்
- அற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன்
- ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – பிரபஞ்சன்
- சிஙக்ப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்
- ஓசைகள் பலவிதம்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -16
- Ilankai Tamil Sangam is holding a grand cultural show, ‘Kalai Vizha 2010’
- அஜ்னபி கவிதைகள்
- நிராகரிப்பு
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று
- கட்டைக்குரல்
- சொல்லப்படாதவைகள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -19
- ஒரு விபத்து; சில நிகழ்வுகள்
- அறிவியல் புனைகதை:- நீர் மேல் எழுத்து
- களம் ஒன்று கதை பத்து – 2 -பாருக்குள்ளே நாலுபேர்
- முள்பாதை 31
- இத்தனை வருடங்களும் – இப்படித்தான்
- அங்காடி தெரு காட்டும் கண்ணாடி
- எலி வீஸல் – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதான தூதுவர்
- தெரிக்கும் உவமைகள்…
- ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து
- வேத வனம் விருட்சம்- 87