எஸ்ஸார்சி
மலை தோன்றும் குட்டச்செடியே வா
சுரம் போக்கும் மூலிகை நீ
செவியுற்றவர்கள் நின்னிடம் விரைகிறார்கள்
மூன்றாவது விண்ணகத்தில்தான்
அரச மரம் இருக்கிறது
தேவர்கள் அங்கே குட்டமூலிகை பெற்றார்கள்
விண்ணிலே தங்கக்கப்பலில்
அமுத மலர்தரு குட்டம் கொண்டு வந்தார்கள்
தலை நோய் கண்நோய் உடல் உபாதை
எதுவும் குட்டம் நீக்கட்டும்
அருந்ததி க்கொடியே உனக்கு
மேகம் பிதா இரவு அன்னை
காமமிகு கன்னிகைபோல்
மரம் படர் கொடி நீ
யமன் பயணிக்கும் கரு நிறக்குதிரையின்
வாயினின்று கீழ் வீழ்ந்த நீ
மரம் பற்றினாய்
சிறகுடை நதியாகி வந்திடுக இவண்
தேவர்களே புனிதமில்லாதவன்
அவியை அக்கினி சுமந்து செல்லவேண்டாம்
தேவர்களும் அங்கே போகாதீர்கள்
ஒநாய் ஆடொன்றொடு மோதி முடிப்பதுபோலே
எதிரியை அழியுங்கள்
எங்கள் வெற்றிக்குப் பங்கம் செய்யும்
பிராமணனை மிதியுங்கள்
அவன் மரணம் எய்தட்டும்
விருத்திரனை முடிக்கும் இந்திரனே
பகைவனின் பிறப்புறப்பை மாய்த்துவிடு
கதிரோன் எனது கண்
காற்று எனது உயிர்
வானம் எனது ஆன்மா
புவி எனது உடல்
யான் வெல்லப்படாதவன்
ஆயுள் பலம் செயல் செய்கை
அறிவு இந்திரியம்
உச்சமாகட்டும் எனக்கு
யான் அதர்வன்
மகிமையுடை ஆரியனோ
வலிமையுடை தாசனோ
என்னைப்பங்கம் செய்ய இயலாது
யான் வருணன் பேசுகிறேன்
செயல்கள் தொடர்கின்றன
தாசர்கள் பூமிக்குக்கீழே போகிறார்கள்
வளி மண்டலத்துக்கு அப்பால்
வேறொரு பொருளுண்டு
அடைவது சாத்தியமில்லை அவ்விடம்
வருணனும் அதர்வனும் ஏழு திக்குத்துணைவரும்
மித்திரர்கள் உறவினர்
பாரதி இஷை சரசுவதி மூவரும்
எம் வேள்விச்சாலை வருக
தருப்பைப்புல்லில் அமர்க
அக்கினியே தேவ முதல்வன்
அவன் கொண்டு செல்லும் அவியுண்ணட்டும் தேவர்கள்
துன்பங்கள் துன்பம் செய்பனுக்கு ஆகுக
சாபங்கள் சபிப்போனையே சேர்க
வேல்கள் துன்பஞ்செய்பவனுக்குத்தான் தயாராகிறது
ஒரு பிராமணப்பெண் பத்து பிராமணரல்லாத கணவர்களை
முன்னம் கொண்டிருந்தாலும்
ஒரு பிராமணன் அவள் கரம்பிடிக்க
அவனே அவள் புருடனாவான்
அரசனுக்கும் வைசியனுக்கும் அப்படி ஆவதில்லை
ஐந்துவித மனிதர்க்குச்சூரியனே
அறிவித்தச் செய்தி இது
பிராமண மனைவியை
தேவர் மனிதர் அரசர் திருப்பி அளிப்பார்கள்
அளிக்க அறிவில்லா அரசனுக்கு ஆயிரம் அள்ளித்தரும்
அந்தப்புறச்சுந்தரிகள் ஏது
மாடுகள் கன்று ஈவது ஏது
உணவு படைக்க பொன்மாலை அணிந்த பணியாளேது
தேர் இழுக்கும் கருஞ்செவியுடை வெண்குதிரை
நோய் தீர்வதேது
ராசாங்கத்தில் தாமரைத்தடாகமொடு அல்லிக்குளமேது
அழகுப்பசுவின் பால் கறக்க ஆளேது
மனைவியில்லா பிராமணன்
உறங்கும் வீட்டில்
பசு சினைப்பிடிப்பதில்லை
காளையும் நுகத்தடி சுமப்பதில்லை
மானுடத்தலைவனே
பிராமணப்பசுவைப்புசிக்க விரும்பாதே
நஞ்சு நிறைந்தது துனபம் தருவது அது
பிராமணனை ச்சாது என நினைத்து
அவன் செல்வம் கொள்வோன்
மண்ணாலும் விண்ணாலும் வெறுக்கப்படுவான்
பிராமனன் நாக்கு வில்லாகும்
சொல் அம்பின் கழுத்தாகும்
அவன் கோபத்தால் தூரமிருந்தே
எதிரியை அழிப்பவன்
தேவனுக்கு உறவான பிராமணனை இம்சிப்போன்
பிதுர் உலகம் செல்வதில்லை
பிராமணனின் மீது கோழை உமிழ்வோர்
மயிர்ப் புசித்து ரத்த ஆறு அமர்வர்
பிராமணனை இம்சிக்கும்
தேசம் பாழாகும்
படகொன்றை சிறு ஒட்டை மூழ்கடிப்பதுபோலே
ராச்சியம் மொத்தமாய் அழிந்துபோம்
நாரத முனியே பிராமணனின் பொருளை
அபகரிப்போனுக்கு விருட்சங்கள் நிழல் தராது
முரசு கர்ச்சிக்கட்டும்
எதிரிகள் கலங்கட்டும்
அவர்தம் கருத்துக்கள் குழம்பட்டும்
சுரம் எனும் நோய் தூரஞ்செல்க
நின் சகோதரன் கபம் சகோதரி இருமல்
நீ அயல் மக்களைச்சேர்
காந்தாரம் முஜவந்தி அங்க மகத தேசம்
துரத்துகிறோம் சுர நோயை யாம்
கிருமிகள் அருகிலுள்ளவை அதி அருகிலுள்ளவை
வெகு சிறியவை யாவும் கொல்லப்படுகின்றன
இரவின் தேவதை சீனிவாலியே
கருவை உருவாக்கு
சினையை நிலையாக்கு
தாமரை மலர்மாலை சூடும்
அசுவினிகளே கரு நிலையாக்குக
மித்திரன் வருணன் குரு இந்திரன் அக்கினி தாத்ரு
கருவை நிலைக்கச்செய்யட்டும்
விஷ்ணு யோனியை பக்குவமாக்குவோன்
துவஷ்டா உருவு செழிப்பிக்க
பிரஜாபதி வளமாகட்டும்
அக்கினியே எழுக
வீரனை உருவாக்கு
வீரன் வீர்யன் நீ
பிரஜைக்காக அழைக்கிறோம் உன்னை
பெண் உடல் பத்து மாதம் தாங்கிய
ஆண் மகவுக்கு தாத்ரு நிலைப்படுத்தட்டும்
மார்பணியும் பூநூலின் மும்முடி
ஒன்பது பிராணன்களைக்கொண்டது
பொன் வெள்ளி இரும்பு என வரிசையாய்
புவி செடிகொடி அக்கினி இவை
காப்பு நலம் பலம் தருக
உணவு ஆண்மகவு பசுக்கள்
விருத்தியாகட்டும்
மும்முடித்தங்கம் நிறையாயுள் தருக
இப்புவி இன்பந்தருவது
தேவர்களுக்கும் வாழ்விடமிது
வெல்ல முடியாதது
யாரால் மரிப்பு
எமக்கு வருமோ அவனும் யாமும்
அனுசரித்துக்கேட்கிறோம் அக்கினியே
மூப்பின் முன் மரிப்பு வேண்டாம் எமக்கு ( அதர்வ வேதம் காண்டம் 5)
————————————————————
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11
- புளுடோவைக் கடந்து கியூப்பர் வளையத்தை உளவப் போகும் புதுத் தொடுவான் விண்கப்பல் ! (கட்டுரை -1) (New Horizon Spacecraft)
- நள்ளிரவின் பாடல்
- மழைகள்
- ரிஷியின் கவிதைகள்:
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1
- குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது
- முதல் சம்பளம்
- அற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன்
- ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – பிரபஞ்சன்
- சிஙக்ப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்
- ஓசைகள் பலவிதம்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -16
- Ilankai Tamil Sangam is holding a grand cultural show, ‘Kalai Vizha 2010’
- அஜ்னபி கவிதைகள்
- நிராகரிப்பு
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று
- கட்டைக்குரல்
- சொல்லப்படாதவைகள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -19
- ஒரு விபத்து; சில நிகழ்வுகள்
- அறிவியல் புனைகதை:- நீர் மேல் எழுத்து
- களம் ஒன்று கதை பத்து – 2 -பாருக்குள்ளே நாலுபேர்
- முள்பாதை 31
- இத்தனை வருடங்களும் – இப்படித்தான்
- அங்காடி தெரு காட்டும் கண்ணாடி
- எலி வீஸல் – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதான தூதுவர்
- தெரிக்கும் உவமைகள்…
- ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து
- வேத வனம் விருட்சம்- 87