கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -10

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++++++
காதல் மௌனம்
++++++++++++++++++++++++++++++

மலர்ந்த இப்புதிய காதலுக்குள்
மடிந்து விடு ! ஆயினும்
உனது பாதை
உருவாவது மறு பக்கத்தில் !
வானமாக
வடிவு எடுப்பாய் !
சிறைக் கோட்டை மதிலை
இடிக்க
கோடரி எடுத்துப் போ !
தப்பிச் செல் !
நிறத்துக்குள் உருமாறி
திடீரெனத் தோன்றியவன் போல்
வெடித்துச் செல் !
இப்போதே செய்து முடி !
அடர்ந்த புகை மூட்டம்
உனைப் போர்த்தி யுள்ளது.
நழுவிச் செல் அப்பகுதியை விட்டு !
மரணம் அடைவாய்
அமைதி யாக !
மௌனமே மெய்ப்பிக்கும்
மரணத்தை !
முந்தைய உந்தன் பிறப்பு
மூர்க்கத் தனமாய் மௌனத்தில்
முளைத்த
ஓர் ஓட்டப் பந்தயம் !
வாய் பேசாத முழுநிலவு
இப்போது
வானில் எழுகிறது !

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 18, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts