கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் = கவிதை -28 பாகம் -3

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அப்போது சோகமும் விடுதலை உணர்வும் கொண்ட முகத்தோடு என்னைக் கடந்து சென்ற முதியவர் ஒருவர் பெருமூச்சோடு கூறினார் : “காதல் என்பது நமக்கு ஆதி முதல்வன் அளித்த ஓர் இயற்கைப் பலவீனம்.”

ஆனால் உடல் முறுக்கேறிய ஒரு வாலிபன் அதைத் திருத்தி, “காதல் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஒன்றாய்ப் பிணைப்பது,” என்று கூறினான்.

பிறகு துக்க முகத்தோடு வந்த ஒரு பெண் பெருமூச்சுடன் “காதல் கரு விரியன் பாம்பு கொட்டி மரணம் விளைவிக்கும் ஒரு விஷம் !” என்று உரைத்துச் சென்றாள்.

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++++++++++++++
<< காதல் வனிதை >>
+++++++++++++++++++++++++++++++

ஆரம்ப காலத்தின்
ஆதி மூலமாய்,
ஆக்கிய விளைவு களாய்க்
காட்டும்
அந்த உணர்ச்சி எது ?
பிறப்பையும், இறப்பையும் கனவாய்ச்
சிறப்பாகத் செய்து வரும்
அந்த விழிப்பாளி யார் ?
விந்தை யானது
இந்த வாழ்வை விட !
ஆழ்ந்து போவது
அந்த இறப்பை விட !

++++++++++++++

உரைப்பீர் நண்பரே !
காதலின் விரல் நுனி
ஆத்மா வைத் தழுவாதவர்
உங்களில் யாரேனும் உள்ளரோ
வாழ்க்கையின்
உறக்கத் திலிருந்து
உயிருடன் விழித் தெழாமல் ?
இதயம் நேசிக்கும்
காதற் கன்னியின் கூக்குரலுக்கு
தாய் தந்தை யரைப்
புறக்கணிக் காதவர்
உங்களில் யாரென்று
உரைப்பீரா ?

+++++++++++++++

உங்கள் ஆத்மா தேர்ந் தெடுத்த
ஒரு பெண்ணைச் சந்திக்க
யார் உங்களில்
தூரமாய்த் திரைகடல் ஓடிப்
பயணம் செய்யா தவர் ?
பாலை வனத்தைக் கடக்காதவர் ?
எல்லா வற்றுக்கும்
உயர்ந்த மலைச் சிகரத்துக்கு
ஏறிச் செல்லாதவர் ?
நறுமண மூச்சும்,
இனிய குரலும், மென்கரங்களும்
ஆத்வாவைப் பற்றிய
வனிதை யைத் தேடி
வையத்தின் விளிம்புக்கு ஓடாத
வாலிப இதயம் எது ?

++++++++++++++

எந்த ஒரு மனிதன் தான்
இதயம் தன்னை
நறுமணப் புகையாய்
எரிக்காமல்
இருக்கிறான்
இறைவன் முன்னே,
அவனது
ஆழ்ந்து உருகிடும்
வழிபாட் டைக் கேட்டு
இறைவன்
வரம் அளிக்க வரும்
தருணத்தில் ?

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 10, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts