யூசுப் ராவுத்தர் ரஜித்
ஒவ்வொரு அசைவிலும்
உன்னைப் போலவே நான்
வண்ணமாய் என்மேல்
அப்பிக் கொண்டாயம்மா
அதனால்தான் இரும்பு நான்
துருவாகவில்லை
கேப்பைக்கூழில் மோர் சேர்த்து
கழியைக் காட்டி ஊட்டினாய் அன்று
அறுபது தாண்டியும்
இரும்பாய்க் கிடக்க
அந்தக் கூழ்தான் காரணமாம்
நாடியைப் பாரத்துவிட்டு
நாட்டு வைத்தியர் சொல்கிறார்
நான் கருவான கதையை
முதன்முதலில் கடவுள்
உன்னிடம்தான் சொன்னார்
நான் உருவான கதையை இன்று
கடவுளிடமே சொல்கிறேன்
அன்னை இருப்போர்க்கு
அன்னையர் தினம்
அன்னை இழந்தோர்க்கு?
பறவையாய்ப் பிறந்திருந்தால்
சிறகு பெற்றதும் மறந்து வாழலாம்
மகன் நான் மறப்பதென்பது
மரணத்தில்தானம்மா
சுமையாக இருந்தேன் அன்று
சுமைதாங்கி யானேன் இன்று
அழுதழுது மாய்கிறேன்
எப்படிச் சுமப்பே னென்றல்ல- நீ
எப்படிச் சுமந்தா யென்று
- ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று
- குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
- பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீ ரங்கம் வி. மோஹனரங்கன்
- கொங்குநாட்டுத் தமிழ் குழந்தை (புலவர் குழுந்தை)
- பத்துப்பாட்டில் தொழிலும், தொழிலாளர்களும்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -14
- பெத்தமனம் பித்து
- என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010
- பட்சியும் கனகாம்பரமும்
- ஆபிதீனின் கதை, “அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு”
- வேத வனம் விருட்சம் 85
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9
- ஆயுத மனிதன் (The Man of Destiny ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -17
- முள்பாதை 29
- காற்றாடிகளுடன் உறவாடிய நாட்கள்
- திராவிட அரசு திராவிடச் சான்றோர் வேண்டுகோளைச் செவிமடுக்குமா?
- இந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை
- காதலி எனும் கிறுக்கல்கள்!
- உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்
- அம்மா
- உயிர்பெருக்கில் குளிர்காய்தலை குறித்து
- அஜ்னபி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் = கவிதை -28 பாகம் -3
- சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு