மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“உங்கள் ஆத்மா தேர்ந்தெடுத்த ஒரு பெண்ணைச் சந்திக்க உங்களில் யார் தூரமாகத் திரைகடல் ஓடிப் பயணம் செய்யாதவர், பாலைவனத்தைக் கடக்காதவர், எல்லாவற்றுக்கும் உயர்ந்த மலைச் சிகரத்துக்கு ஏறிச் செல்லாதவர் ?”
கலில் கிப்ரான்.
+++++++++++++++++++++++++++++++
<< ஆலயத்தின் வாசலில் >>
+++++++++++++++++++++++++++++++
என் ஆத்மாவைப் பற்றும்
மறைந்துள்ள
அந்த முரட்டு மென் கரங்கள்
யாருடைவை ?
என்னிதயத்தில் நிரம்பி வழியும்
கசப்புள்ள களிப்பும்
இனிப்புள்ள வலியும்
கலந்திருக்கும்
ஒயின் மதுபானம் எது ?
உறக்கத்தைக் கலைத்து
இரவின் அமைதியில்
என் தலையணை மேல் சுற்றும்
பறவையின்
இறக்கைகள் யாவை ?
++++++++++++++
அறிந்து கொள்ள முடியாது
சிந்திக்க வைத்து
அளவுக்கு மிஞ்சிய
உணர்ச்சியில்
வெறித்து நான் நோக்கிடும்
கண்காணா
அந்த மாயப் பொருள் யாது ?
எந்தன் பெரு மூச்சில்
இருப்பது துயரம் !
எழில் மயமாகும் அது
புன்னகையின் எதிரொலியாய் !
பூரிப்பை விட அது
பொலிவானது !
+++++++++++++++
என்னைக் கொன்ற பின்பு
காலை விடிவு வரை
என்னை உயிர்த்திட வைத்து
என் இல்லத்தை
ஒளிமயத்தால் நிரப்பும்
காணாத ஓர் வல்லமைக்கு
நான் ஏன் சரண் அடைவேன் ?
காதலென்று நாம் சொல்வது
யாதென்று தெரியுமா ?
யுக யுகமாய்
நமது உள்ளுணர்வில்
புகுந்து கொண்டு
மறைந் திருக்கும் அந்த
மர்மம் என்ன ?
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3, 2010)
- சமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13
- கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்
- ஆசிரியருக்கு
- எழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்
- காற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.
- கலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்
- மொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010
- ஆசிரியர் அவர்களுக்கு
- பூமியின் மையப் பூத அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் ! (Geo-Reactor & Geo-Magnetism)(கட்டுரை -3)
- வேதவனம் –விருட்சம் 84
- டோரா மற்றும் நாங்கள்
- முள்பாதை 28
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -16
- சுஜாதா எழுதாத கதை
- நினைவுகளின் சுவட்டில் – (47)
- பரிச்சய முகமூடிகள்…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2
- அன்னையர் தினம்