ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++++++++++
போதுமா சொற்கள் ?
++++++++++++++++++++++++++++++
அமைதிப் புறாவை விட நீ
மௌனமாய் இரு
அந்த மரத்தி லிருந்து
சிறகும் இறக்கைகளும் உன்மேல்
துளிர்க்கும் போது !
புறாச் கூச்ச லுக்கும்
திறக்காதே உனது வாயை !
குளத்தில் பாயும் தவளையைப்
கொத்திப் பற்ற முடியாது
பாம்பு !
தவளை மீண்டும் கரைமேல்
தாவிக் கத்தும் !
துரத்திடும் அதைப் பாம்பு
மறுபடியும் !
+++++++++++++
கீச்சுக் குரல் கொடுக்கத்
தவளையும்
கற்றுக் கொண்டால்
புரிந்து கொள்ளும் பாம்பு
தவளையின்
அடித்தளக் குரலென்று !
தவளை
முழு மௌனத்தில் இருந்தால்
மீண்டும்
தூங்கச் செல்லும்
பாம்பு !
தவளைக்குக் கிடைக்கும் பார்லித்
தானியம் !
++++++++++++
ஆங்கே மூச்சு விட்டு
ஆத்மா வசிக்கும்
அமைதியாய் !
பார்லி தானியத்தை
நிலத்தில்
விளைத்தால் முளைக்கும் !
மோதுமா இந்தச் சொற்கள் ?
அல்லது
பிழிந்து சாரெடுக்க வேண்டுமா
இதற்கு மேலும் ?
நான் யாரெனச் சொல்
நண்பனே ?
(தொடரும்)
*****************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3, 2010)
- சமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13
- கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்
- ஆசிரியருக்கு
- எழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்
- காற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.
- கலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்
- மொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010
- ஆசிரியர் அவர்களுக்கு
- பூமியின் மையப் பூத அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் ! (Geo-Reactor & Geo-Magnetism)(கட்டுரை -3)
- வேதவனம் –விருட்சம் 84
- டோரா மற்றும் நாங்கள்
- முள்பாதை 28
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -16
- சுஜாதா எழுதாத கதை
- நினைவுகளின் சுவட்டில் – (47)
- பரிச்சய முகமூடிகள்…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2
- அன்னையர் தினம்