கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++++
போதுமா சொற்கள் ?
++++++++++++++++++++++++++++++

அமைதிப் புறாவை விட நீ
மௌனமாய் இரு
அந்த மரத்தி லிருந்து
சிறகும் இறக்கைகளும் உன்மேல்
துளிர்க்கும் போது !
புறாச் கூச்ச லுக்கும்
திறக்காதே உனது வாயை !
குளத்தில் பாயும் தவளையைப்
கொத்திப் பற்ற முடியாது
பாம்பு !
தவளை மீண்டும் கரைமேல்
தாவிக் கத்தும் !
துரத்திடும் அதைப் பாம்பு
மறுபடியும் !

+++++++++++++

கீச்சுக் குரல் கொடுக்கத்
தவளையும்
கற்றுக் கொண்டால்
புரிந்து கொள்ளும் பாம்பு
தவளையின்
அடித்தளக் குரலென்று !
தவளை
முழு மௌனத்தில் இருந்தால்
மீண்டும்
தூங்கச் செல்லும்
பாம்பு !
தவளைக்குக் கிடைக்கும் பார்லித்
தானியம் !

++++++++++++

ஆங்கே மூச்சு விட்டு
ஆத்மா வசிக்கும்
அமைதியாய் !
பார்லி தானியத்தை
நிலத்தில்
விளைத்தால் முளைக்கும் !
மோதுமா இந்தச் சொற்கள் ?
அல்லது
பிழிந்து சாரெடுக்க வேண்டுமா
இதற்கு மேலும் ?
நான் யாரெனச் சொல்
நண்பனே ?

(தொடரும்)

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts