மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“வாழ்க்கை இரண்டு பாதியாய்ப் பிரிக்கப்படும். ஒன்று உறைந்து முடங்கிப் போவது. மற்றொன்று எரிந்து மலர்வது. எரிந்து மலரும் பாதியே காதல் உணர்ச்சி.”
எனக்கு வலு வளித்திடு இறைவா !
எரியும் ஒளி மயத் துக்கு !
எனக்கு உண வளித்திடு இறைவா !
புனிதத் தீ மயத் துக்கு !
கலில் கிப்ரான்.
+++++++++++++++++++++++++++++++
<< ஆலயத்தின் வாசலில் >>
+++++++++++++++++++++++++++++++
தீயின் புனிதத் தால் எனது
வாய் இதழ்களைத்
தூய்மை யாக்கிக்
காதல் உணர்வைப் பற்றி
ஓத விரும் பினேன் !
வரவில்லை சொற்கள்
வாயி லிருந்து !
காதல் துளிர்த்த போது
வாய்ச் சொற்கள்
வீணாய்ப்
போயின மழுங்கி !
இதய நாதம்
மௌன கீத மானது !
++++++++++++++
என்னிடம் கேட்டாய்
இனிய காதலைப் பற்றி !
அதன்
மர்மத்தை –
மாயத்தைக் கூறுவேன்
உறுதியாய் !
காதல் கவச ஆடை
என்னைப்
போர்த்திக் கொண்டதால்
காதலின்
போக்கை அறியவும்
அதன் நற்பயன்
நோக்கவும் விழைகிறேன் !
யாரெனக்கு
பதில் அளிப்பார்
எனக்குள்
இருப்பதைக் கேட்டால் ?
+++++++++++++++
என் உள்ளத்தைப் பற்றிச்
சொல்வீரா ?
என் ஆத்மா வைப் பற்றி
தெரிய வேண்டும்
எனக்கு !
யாரெனக்கு
என் இதய த்தின்
இயக்கம் பற்றி விளக்க
இயலும் !
தின்று வருகுது என்னை !
என் மன உறுதியைக்
கொன்ற ழிக்குது !
என் உள்ளத்தின்
உள்ளே
எரிந்து கொண்டிருக்கும்
இந்த
நெருப்பு தான் என்ன ?
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 26, 2010)
- எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor) (கட்டுரை -2)
- தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்
- முள்பாதை 27
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! (ஏப்ரல் 26, 1986)
- எப்போதும் நம் வசமே
- வழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12
- ஆற்றுப்படைநூல்களில் வறியோர் வாழ்க்கை
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)
- அமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்
- மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று
- ஆதலினால்..
- மின்னல் விழுதுகள்!
- வேத வனம்- விருட்சம் 83
- தூக்கம் …
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது
- பேசாதவன்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15
- நினைவுகளின் தடத்தில் – (46)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1
- எழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்!
- 27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு
- 108எண் வண்டி
- எழுத்தின் வன்மம் .
- குறத்தியின் முத்தம்
- இரவுகளின் சாவித்துவாரம்
- சுஜாதா 2010 விருது வழங்கும் விழா
- அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு