ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நாணல் புல்லாங் குழல் கீதம்
அந்தரங்க உறவுக்கு இச்சையும்
அந்தரங்க உறவும்
ஒரே கீதத்தில் எழும் !
அவல முற்ற
சரண் அடைவும்
அரிய காதலும் உண்டாகும்
ஒருங்கே ! அதை
இரகசிய மாய்க் கேட்கும்
ஒருவன்
அறிவில் லாதவன் !
ஒரு நாக்குக்கு
வாடிக்கை யாய்க் கிடைப்பது
ஒரு செவிதான் !
கரும்புப் புல்லாங் குழலுக்கு
வருவதும்
அவ்விதப் பலனே !
காரணம்
சாரின் சுத்திகரிப்புக் களத்தில்
சர்க்கரை கிடைக்கும் !
புல்லாங் குழலில் எழும்
சங்கீதம்
எல்லோ ருக்கும் !
+++++++++++
நாட்கள் கடந்து செல்லட்டும்
நாம் தவிர்க்க இயலாத்
துயரின்றி !
புல்லாங் குழல் இசையின்
உல்லாசப் பாடலில்
ஊறிக் கிடப்பாய் !
ஒவ்வொரு தாகமும்
நிறை வேற்றப் படும் !
பரந்த நளினக் கடலில்
விரைந்து வரும்
விந்தை மீன்களுக்கு
நீர் மீதிருக்கும் நேசம்
தீராது !
கடலருகில் வாழ்வரோ அங்கே
உடல் வளர்க்க
முடியாது போனால் ?
புல்லிலைப்
புல்லாங் குழலிசை கேட்க
உல்லாசம்
இல்லாது போனால்
உளறுவதை நிறுத்தி விட்டு
விலகிச் செல் நீ
விடை பெற்று !
+++++++++++
(தொடரும்)
*****************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 13, 2010)
- முள்பாதை 25
- நினைவில் நின்றவள்
- சில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் !
- மனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு
- கருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக
- முல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10
- அவனுக்காவே வாழ்ந்தாள்..= புத்தக வெளியீட்டு விழா
- உள்ளங்கையில் உலக இலக்கியம்= அறிமுகம்
- ஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)
- 11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -2
- முன் முடிவுகளற்று இருப்பது
- வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்
- வீட்டோடு
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -13
- இவர்களும் சுவர்களும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு
- குரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்
- 9/11 – விடையறாக் கேள்விகள்
- சு.மு.அகமது கவிதை
- காதல் வரம் பெற்றிடாத ஞானிகள்
- மரணத்தின் வாசல்..
- சதையானவள் .
- தொட்டி மீன்
- கவன குறிப்பெடுத்தல்..!
- வேத வனம் விருட்சம் 81