மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நித்தியமான நேசத்தைத் தவிர
மற்றொன்றை மனம்
பற்றிக் கொள்வ தில்லை !
காரணம்
நித்தியம் போலிருப்பது
நேயமே !
கலில் கிப்ரான்.
+++++++++++++++++++++++++++++++
<< இடிக்கப்பட்ட ஆலயங்கள் >>
+++++++++++++++++++++++++++++++
உனக்கு நான் கட்டி
முடித்த ஆலயங்களை எல்லாம்
இடித்துப் போட்ட
தகர்ப்பு மிச்சங்கள் இவை
எனதருமைக் காதலி !
உனது உல்லாச வாழ்வுக்கு
நான் அமைத்த
செல்வ மாளிகையின்
சிதைந்த செங்கற்கள் இவை !
எளியவரைக்
இறுக்கிப் பிழிந்து
ஆடம்பர வாழ்க்கைக் கென்னை
அர்ப்பணித்து
உயர்ந்த பெரு நாட்டுக்கு
எடுத்துச் சொல்ல
எதுவும்
காணப் படவில்லை !
++++++++++++++
எனது நகரைக் கைப்பற்ற
உதவி செய்த
போர் யந்திரங் களை எண்ணி
ஆழ்ந்து சிந்தனை செய்
அருமைக் கண்மணி !
எனது வாழ்வுப் பணி எல்லாம்
வீணடித்த
காலத்தைச் சிந்தித்துக்
கருத்தில் வை கண்மணி !
நான் ஏற்படுத்திய
மாபெரும் சாம் ராஜியத்தை
கால மறதி
மூழ்க்கி விட்டது கண்மணி !
உனது அருங் காதல்
ஆக்கிய
அணுக்களைத் தவிர
அனைத்தும்
சிதைந்து விட்டன கண்மணி !
ஆயினும் உனது
அழகத்துவ நல்வினைகள் யாவும்
பிழைத்துக் கொண்டன !
+++++++++++++++
ஜெருசலத்தில் நான்
உருவாக்கினேன் ஓர் ஆலயத்தை !
குருக்கள் கோயிலைப்
புனிதப் படுத்தினர் !
ஆயினும்
அதனை அழித்தது காலம் !
ஆனால்
காதலுக்கு நான்
கட்டிய
என்னிதய பீடத்தைக்
காத்தது கடவுள்
அழிவின் ஆற்றல்கள் அதைச்
சிதைக்காமல்
நீடிக்க வைத்து !
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 13, 2010)
- முள்பாதை 25
- நினைவில் நின்றவள்
- சில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் !
- மனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு
- கருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக
- முல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10
- அவனுக்காவே வாழ்ந்தாள்..= புத்தக வெளியீட்டு விழா
- உள்ளங்கையில் உலக இலக்கியம்= அறிமுகம்
- ஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)
- 11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -2
- முன் முடிவுகளற்று இருப்பது
- வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்
- வீட்டோடு
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -13
- இவர்களும் சுவர்களும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு
- குரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்
- 9/11 – விடையறாக் கேள்விகள்
- சு.மு.அகமது கவிதை
- காதல் வரம் பெற்றிடாத ஞானிகள்
- மரணத்தின் வாசல்..
- சதையானவள் .
- தொட்டி மீன்
- கவன குறிப்பெடுத்தல்..!
- வேத வனம் விருட்சம் 81