கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -1

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



நாணல் புல்லாங் குழல் கீதம்

பிரிவைப் பற்றி

புல்லின் இலைகள் சொல்லும்

புனைகதை கேளீர் !

“மண்தரை மேலிருந்து என்னைத்

துண்டித்த வேளை முதல்

இந்த அழுகுரல் எழுப்பினேன் !

நேசிப் பவரை விட்டுப்

பிரிவுத் துயர் உற்றோர்

புரிந்து கொள்வர் நான்

உரைப்பதை !

தம்மிடத்தி லிருந்து கட்டாயம்

கடத்தப் படுவோர்

தாகம் கொள்வார் மீண்டும்

தடம் வைக்க !

+++++++++++

எந்தக் கூட்டத்திலும் நான் போய்ப்

பங்கெடுக் கிறேன்

பந்த பாசமாய்ப் பழகிப்

பரவசமாய் ஈடுபட்டு !

தோழனாய் உள்ளேன் நான்

ஒவ்வொரு வனுக்கும் !

ஆயினும்

அவரின் குறிப்பு இரகசியம்

அறிபவர் மிகச் சிலரே !

செவிகள் இல்லை அதற்கு.

உடம்பி லிருந்து

உந்திச் செல்லும் ஆன்மா !

உடலுக்கு

ஒளியேற்றி வைக்கும் ஆன்மா !

காணப் படாது

கலந்தி ருக்கும் ஆன்மா !

ஆத்மாவைக் காணும்

ஆற்றல்

அற்ப விழிகட்கு இல்லை !

+++++++++++

புல்லிலைப் புல்லாங் குழலிசை

வெறும் காற்றில்லை.

நெருப்பு அது !

காலி யாக இருக்கட்டும் !

காதல் தீயானது

புல்லிலைக்

கீதத்தில் பின்னித்

தூண்டப் படுவதைக் கேள் !

குழப்பமே ஒயின்

குடி போதையில் தள்ளும் !

புல்லிலைப்

புல்லாங் குழல் ஒரு தோழன்

ஆடைத் துணி

கிழிந்து போய் எறிவதை

விரும்பு வோர்க்கு !

நாணல் இலைகள் புண்பட்டுப்

பாதம் பணியும்

அடிமைகள் போல் !

அந்தரங்க உறவுக்கு இச்சையும்

அந்தரங்க உறவும்

ஒரே கீதத்தில் எழும் !

(தொடரும்)

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 6, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts