மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“என் சகோதரக் கவிஞர்கள் எழுத்து வரி அடிகளுக்கு வலு ஊட்டிக் கவிதை ஆரங்களைப் பின்னக் கற்பனை செய்திருந்தால், ஒருநாள் (வெறுப்படைந்து) அவர்கள் கடிவாளத்தைப் பின்னுக்கு இழுத்து தமது கைப் பிரதிகளைக் கிழித்துப் போட்டிருப்பார்.”
“தீர்க்க தரிசி அல்-முதாநபி (Al-Multanabbi) முன்னறிவிப்பு செய்திருக்கிறார் : புகழ் பெற்ற அரபிக் கவிஞர் அல்-·பாரித் (Al-Farid) எழுதிய அனைத்தும் தற்காலக் கற்றுக் குட்டி கவிஞருக்கு கட்டாயக் கைநூல் மூலமாக உதவி செய்யும். கவிஞர்கள் மையை வீணாக்கிக் கவனக் குறையால் மறதியில் எழுதித் தள்ளி மயிலிறகுக் கோலை உடைத்திருப்பார்.”
கலில் கிப்ரான்.
+++++++++++++++++++++++++++++++
<< கவிஞரும் கவிதைகளும் >>
+++++++++++++++++++++++++++++++
கவிதை என்ப தொரு
புன்முறுவலின்
புனித மீள் பிறப்பு
என்னினிய தோழர்காள் !
கண்ணீரை
உலர வைப்பது கவிதை
ஒரு பெருமூச்சில் !
ஆத்மாவில் வீற்றி ருக்கும் ஓர்
ஆன்மாவே கவிதை !
இதயத்தை ஊட்டி வளர்ப்பதே
கவிதை !
இரக்கம் அதற்கோர்
மதுபானம் !
இவ்விதம் படைக்கப் படாதது
உண்மை யற்ற
ஒரு தூதுச் செய்தியே !
++++++++++++++
நித்திய வானுலகி லிருந்து
கண்காணிக்கும்
கவிஞரின் ஆன்மாக்களே !
முத்து முத்தான உமது
சொற்களால்,
ஆத்மாவின் வைரக் கற்களால்
நீங்கள் போற்றும் பீடங்களைத்
தேடிக் கொண்டு
நாங்கள் செல்றோம் !
காரணம் :
உலோகாயுத இடி முழக்கமும்,
தொழிற் சாலை யந்திரச் சத்தமும்
அழுத்திக் கொண்டுள்ளன
நம்மை எல்லாம் !
ஆதலால்
நமது கவிதைகள் யாவும்
பார வண்டிகள் போல்
பளுவாய் உள்ளன !
நீராவி ரயில் விசில் போல்
தீராத உலைச்சல்
அளிப்பவை !
+++++++++++++++
உண்மைக் கவிஞர்களே !
எம்மை மன்னிப்பீர் !
புத்துலகைச் சேர்ந்த
நாமெல்லாம்
ஓடிக் கொண்டி ருக்கிறோம் !
உலோகாயுதப் பொருட்களைத்
நாடிய வண்ணம் !
கவிதையும் இப்போது
கடைச் சரக்காய்ப் போனது !
நித்திய மூச்சாய்
நிலைக்காது !
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 7, 2010)
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -12
- இங்கு எல்லாம்
- வானமெங்கும் வஞ்சியின் வடிவம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிஞரும் கவிதைகளும் கவிதை -26
- அகதிப் பட்சி
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -1
- உலகப் பெரும் விரைவாக்கி செர்ன் ஒரு கால யந்திரம் -6
- திருமங்கையின் மடல்
- முல்லைப்பாட்டென்னும் நெஞ்சாற்றுப்படை
- பரதக் கலையின் வெளிநாட்டுக் காதலிகள்
- மகளிர் விழா அழைப்பிதழ்
- சாவை துணைக்கழைத்தல்
- அப்பாவின் கண்கள் நனைந்திருந்தன
- வெளிச்சப்புள்ளி
- உடலழகன் போட்டி
- அவள் சாமான்யள் அல்ல
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஆறு
- முள்பாதை 24
- 27 வருட போர் : முகலாய பேரரசை வீழ்த்திய ராணி தாராபாயின் மராத்திய தலைமை
- நினைவுகளின் சுவட்டில் – (45)
- மரணம் நிகழ்ந்த வீடு…
- மீன்கதை
- வேத வனம் -விருட்சம் 80
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -9
- முள்பாதை 25