சசிதரன் தேவேந்திரன்
ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
அதனதன் இயல்பு மாறியிருக்கிறது.
ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
வந்து போகும் அத்தனை முகங்களிலும்
ஒரு இறுக்கம் திணிக்கபடுகிறது.
ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
அழும் உறவுகளை தேற்றுவதெப்படியென
யாருக்கும் புரிவதில்லை.
ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
யாருக்கும் பசிப்பதில்லை.
ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
நீண்ட நாட்களுக்கு பிறகு
சந்திக்கும் உறவுகளும்
புன்னகை பரிமாறுவதில்லை.
ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
இறந்தவரின் மகனோ மகளோ
அனைவராலும்
கூர்ந்து கவனிக்கபடுகிறார்கள்.
ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
மரணம் நிகழ்ந்த விதம்
விவரிக்கப்பட்டு கொண்டேயிருக்கிறது.
ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
தொடர்ந்த சில நாட்களுக்கு
மரணம்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
– சசிதரன் தேவேந்திரன்
சென்னை – 92
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -12
- இங்கு எல்லாம்
- வானமெங்கும் வஞ்சியின் வடிவம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிஞரும் கவிதைகளும் கவிதை -26
- அகதிப் பட்சி
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -1
- உலகப் பெரும் விரைவாக்கி செர்ன் ஒரு கால யந்திரம் -6
- திருமங்கையின் மடல்
- முல்லைப்பாட்டென்னும் நெஞ்சாற்றுப்படை
- பரதக் கலையின் வெளிநாட்டுக் காதலிகள்
- மகளிர் விழா அழைப்பிதழ்
- சாவை துணைக்கழைத்தல்
- அப்பாவின் கண்கள் நனைந்திருந்தன
- வெளிச்சப்புள்ளி
- உடலழகன் போட்டி
- அவள் சாமான்யள் அல்ல
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஆறு
- முள்பாதை 24
- 27 வருட போர் : முகலாய பேரரசை வீழ்த்திய ராணி தாராபாயின் மராத்திய தலைமை
- நினைவுகளின் சுவட்டில் – (45)
- மரணம் நிகழ்ந்த வீடு…
- மீன்கதை
- வேத வனம் -விருட்சம் 80
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -9
- முள்பாதை 25