வித்யாசாகர்
நிறைய அலமாரிகளில்
பணம் அடுக்கப்பட்டு
வயிறுகளில் பசி
இறுகக் கட்டி
பட்டில் ஆடையுடுத்தி
மாற்றுப் புடவைக்கு
பிச்சையெடுத்து
விமானத்தில்
நடுக்கடலில்
பட்டப்பகல் – நட்டநடுத் தெருவில்
வாகன நெரிசலுக்கிடையே
திருமணம் நடத்தி
முதிர்கன்னிகளை
ஆங்காங்கே திரியவிட்டு
பெண்களின் கற்பு பேசி
விலைமகள்களுக்கு –
வீடமைத்துக் கொடுத்து
ஜனநாயக தேசமென
மார்தட்டி –
எடுத்ததற்கெல்லாம்
ஜாதி கேட்டு
எம்மதமும்
சம்மதமென சொல்லி
என் மதம் உன் மதமென்று
வெட்டிமாய்ந்து
அரசியலை அழகாக பேசி
அரசியல் வாதிகள் மட்டும்
சொகுசாக வாழ்ந்து
இல்லார்க்கு
இல்லாமலே போவதும்
இருப்பவர்
தனக்கு மட்டுமே வாழ்வதும்
அப்பப்பா..
மிக உன்னதமாக
வாழ்கிறோம் நாம்;
வரலாற்றுக் குறிப்பில் நம்மை
வளரும் தேசமெனக்
குறித்துக் கொள்வோம்,
நாளைய தலை முறை
காரி துப்பட்டும்!
—————————————————–
- மொழிவது சுகம்: நம்மிலுள்ள அந்த ஒன்றிரண்டு பேருக்கு நன்றி
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -10
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -5
- மகளுக்கு…
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -7
- Ameeraga Thamiz Mandram proudly presents “Ini Oru Vithi Seivom”
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- முத்தமிழ் விழா 2010
- கவிமாலை 118
- புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்- பெருஞ்சோறு கொடுத்தது குறித்து…
- பேராசை
- வேத வனம் -விருட்சம் 78
- கருத்தற்ற காதல் மற்றும் (வாழ்வு) குறித்து
- இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்
- நேர்மை
- வாசமில்லா மலர்
- முள்பாதை 22
- சுப்பு அவர்களின் “திராவிட மாயை – ஒரு பார்வை” பற்றிய என் பார்வை
- 27 வருட போர் _ சத்ரபதி ஷாம்பாஜிக்குக் கீழ் மராத்தாக்கள்.(1680 to 1689):
- வேம்பும் வெற்றிலைக் கொடியும்
- பின் தொடரும் வாசம்
- கவனிக்கப்படாத கடவுளே!!!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -1
- மழையோன் கவிதைகள்