மழையோன்
1)
யாருடைய சாயலும் இல்லாமல்
எனக்கான கவிதையை
நான் எழுத வேண்டும்!
கடன் வாங்கா யாப்பு,
கடன் வாங்கா மொழிநடை என்று
எனக்கான கவிதை எழுத முயல்கிறேன்
யார் சாயல் அது?
முதல் எழுத்தை தொக்கி நிற்பது!
மீண்டும் புதிய சொல்லைத் தேடிப் பிடிக்க வேண்டும்.
முடிந்த மட்டும் எழுதுகிறேன்
எனக்கான கவிதையை நானே!
யாரேனும் படிப்பார்களா?
தெரியவில்லை!
பின் ஏன் எழுதவேண்டும்!
எனக்கான உறக்கம் போல!
முடித்துவிட்டேன்!
ஓ!
என்ன இது?
ஒவ்வொரு வார்த்தையும்
ஒவ்வொன்றை பறைசாற்றுகிறதே!
மீண்டும் எழுதவேண்டும்
எனக்கான கவிதையை நானே!!
2)
பறத்தல் என்பது
பறவைகளுக்கே என்றிருந்தேன்.
அன்பே!
அதை நீ பொய்ப்பித்தாய்!!
3)
உனக்கென்று
ஓரகராதி உருவாக்கும் ஆசை எனக்கு.
ஆனால்,
நீயோ பொருளை மாற்றிய வண்ணம் உள்ளாய்!
என் செய்வேன்!?
4)
முன்தினம்,
மழைத்தூறலில் நாம் நடந்த பொழுது,
நீ தேவதையனாய்!
நம்மை நனைத்த மழை
இன்னும் தூறிக் கொண்டிருக்கிறது
மனதில்!!
5)
நீர் அறம் நன்று;
நிழல் நன்று – நம்
இல்லுள் யாவும் நன்று,
சகியே,
நீ இருந்தால்
6)
இருந்தென்ன
நடந்தென்ன
கிடந்தென்ன
நீ ஏது செய்தாலும்
எனக்குள் சாரல் அடிக்கிறது!
7)
இனி
குழந்தைகள் முன் செல்லாதே!
சிறகில்லா தேவதை
ஊரில் உலவுவதாய்க்
கதையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
- மொழிவது சுகம்: நம்மிலுள்ள அந்த ஒன்றிரண்டு பேருக்கு நன்றி
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -10
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -5
- மகளுக்கு…
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -7
- Ameeraga Thamiz Mandram proudly presents “Ini Oru Vithi Seivom”
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- முத்தமிழ் விழா 2010
- கவிமாலை 118
- புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்- பெருஞ்சோறு கொடுத்தது குறித்து…
- பேராசை
- வேத வனம் -விருட்சம் 78
- கருத்தற்ற காதல் மற்றும் (வாழ்வு) குறித்து
- இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்
- நேர்மை
- வாசமில்லா மலர்
- முள்பாதை 22
- சுப்பு அவர்களின் “திராவிட மாயை – ஒரு பார்வை” பற்றிய என் பார்வை
- 27 வருட போர் _ சத்ரபதி ஷாம்பாஜிக்குக் கீழ் மராத்தாக்கள்.(1680 to 1689):
- வேம்பும் வெற்றிலைக் கொடியும்
- பின் தொடரும் வாசம்
- கவனிக்கப்படாத கடவுளே!!!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -1
- மழையோன் கவிதைகள்