மதியழகன் சுப்பையா
ஓயாது
கதவுகளை சாத்திவிட்டுப் போகிறது
இரவின் அமைதி
எஞ்சிய வெளிச்சங்களையெல்லாம் விழுங்கி
எங்கும் நிறைகிறது கனத்த இருள்
தளர்ந்து படுக்கையில் சாய
படர்கிறது தனிமைப் போர்வை
கனவுத் திரையில் கடந்தகால காட்சியோட்டம்
கதவு தட்டும் ஓசையும் கடிகார ஓசையும் ஓயாமல்
தட் தட் தட் – டிக் டிக் டிக்
நினைவு அங்குசங்களின் நிரந்தரக் குத்தல்கள் தாங்கி
தூக்கத்தின் பாதங்கள் பற்றி
கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்
இதற்கு மேலும்
இதற்குமேல் ஒன்றும் கேட்க முடியாது
அதற்குமேல் ஒன்றும் சொல்லவும் முடியாது
கேள்விகளின் போது செவிடாகி விடுவதும்
பதில் சொல்லும் போது ஊமையாகிப் போவதும்
வாடிக்கையாகி விட்டது
கல்லால் தோணி செய்து கடல் கடக்கும்
வேடிக்கை முயற்சிக்கு யார்தான் உதவுவாரோ?
விருப்பம்
நீ கடலாக இருக்கலாம்
ஓராயிரம் நதிகள் உன்னில் கலக்கலாம்
ஜீவநதியாய் இருக்கவே விரும்புகிறேன் நான்
நீயும் மரமும்
ஒவ்வொரு இலையாய்
ஒவ்வொரு பூவாய்
உதிர்க்கும் மரம்
உதிர்ந்தவைகள் உரமாகிப் போகிறது
உதரிய மரத்துக்கே
விழுகின்ற இலைகள் பார்த்து
கெக்கலிக்கிறது புத்திலை
மகரந்தம் சேர சூழ்பையுடன்
விழலாம் பறிக்கப் படலாம்
புத்தம்புது மலர்கள்
வியப்பில்லை மரத்துக்கு
துயரில்லை மரத்துக்கு
நீயும் மரமும் ஒன்றெனக் கொள்
Madhiyalagan@gmail.com
- மொழிவது சுகம் 11-: நமக்குள் உள்ள இன்னொருவன்
- கனவு தேசம்
- எனது மண்ணும் எனது வீடும்
- முக்காட்டு தேவதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ்
- தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்
- செல்வராஜ் ஜெகதீசன் – மனக் குறிப்புகளின் புத்தகம்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -5
- இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்
- எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி
- மகளிர் தினம்
- நித்யானந்தாவும் நேசக்குமாரும்
- வேத வனம் விருட்சம் 76
- எப்போதும் முந்துவது…
- ஓட்டை பலூன்
- உதிர்ந்த இலைகள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -8
- அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்
- எங்கோ பார்த்த முகம்
- ஒரு மகள்.
- துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை
- முள்பாதை 20
- அர்சால்
- மொழிக் குறிப்புகள்
- முப்பத்து மூன்று!
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- அவர்கள் காதலிக்கட்டும்..!
- எச்சரிக்கை……!
- பாவனைப்பெண்