கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -2

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++
உருகும் பனியாக இரு
++++++++++++++++++++++++

“உன்னோடு எப்போதும் இருக்கிறேன்”
என்றால், இறைவனை நீ
சிந்திக்கும் போது
உந்தன் விழிகளின் ஒளியில் இருப்பான் !
உன்னைக் காட்டிலும் அவன்
உன் அருகிலே ஒட்டி இருப்பான் !
உன் மூளையில் இருப்பான் !
உனக்கு நேரும்
வினைகளில் இருப்பான் !
இறைவனைத் தேடி நீ வெளியே
ஏகிட வேண்டாம் !

++++++++++

உருகிடும் பனியாக மாறிடு !
நீயாக நீ இருந்திட
நீயே உனைக் குளிப்பாட்டிக் கொள் !
வெள்ளைப் பூ ஒன்று
விரிந்திடும் மௌன மாக !
உன் நாக்கே அப்பூவா கட்டும் !
வானைப் போல் அகண்ட ஓர்
வாய் வேண்டும் எனக்கு
மெய் மனிதனின்
இயற்கையை எடுத்துச் சொல்லவும்
பேராசை கொண்ட
வார்த்தையைக் கூறவும் !

++++++++++++

எனக்குள் இருந்து
எளிதாய் நொருங்கும் இச்சிமிழ்
உடைந்திடும் அடிக்கடி !
நான் அதனால் பித்தனாவதில்
வியப்பில்லை !
ஒவ்வொரு மாதமும் நிலவு போல்
ஒளிந்து போவேன்
மூன்று நாட்கள் !
உன்னைக் காதலிக்கும் ஒருவனும்
காணாமல் இருப்பது
இந்த நாட்களில் தான் !

++++++++++++++++

நான் சொல்லும் கதையைப்
பின்னிடும் நூலை
நான் இழந்து விட்டேன் !
எனது யானை அலைந்து திரியும்
இந்தியக் கனவுகளில்
மறுபடியும் !
வசனக் கவிதை அமைப்புச்
சிதைந்து போனது
பதிலுக்கு எனது உடலும்
பாதிக்கப் பட்டது !

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 2, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts