மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“காலையில் குடியானவன் தன் குடிலை விட்டு உணவுப் பண்டங்கள் வாங்கத் தாய், தங்கையின் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு நகருக்குச் செல்கிறான். மாலையில் உணவுப் பண்டங்களின்றி வெறுங்கையாகப் பணத்தோடு மீள்கிற போது, வீட்டில் தாயும், சகோதரியும் மரணத்துக்கு இரையாகி மீளாத் தூக்கத்தில் விழுந்து கிடக்கிறார். குடியானவன் தன்னிரு கரங்களையும் மேலே காட்டித் தடாலெனத் தரையில் விழுகிறான்.”
கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)
+++++++++++
விழித்தது காலை வேளை
என் கண்மணி !
விழிப்பின் மென்மைக் கரங்கள்
கனவு கண்டோர்
கண்களைத் தடவு கின்றன !
கதிரொளிச் சுடர்கள்
கதவுகளைத் திறந்தன
வாழ்வின் தீர்வு, உன்னதம்
காட்டி !
பள்ளத் தாக்குகளில்
அமைதி, சமாதானம் நிலவி
சிற்றூர்கள்
தூக்கம் கலைந்து எழுந்திடும் !
ஆலய மணிகள்
காலைப் பிரார்த் தனைக்குக்
குலாவும் ஓசையில் கூப்பிடும்
உலாவும் காற்றில் !
இயற்கையும் வழிபாட்டில் கலந்து
எதிரொலிக்கும் குகைகளில்
அம்மணி ஓசைகள் !
++++++++++++
பசுங் கன்றுகள் தவ்வி
ஓட்டமிடும்
மாட்டுக் கொட்டத்தை விட்டு !
செம்மறி ஆடுகள்
வெளியேறும்
வேலியைத் தாண்டிப்
பளபளக்கும்
பச்சைப் புல் மேய !
அவற்றின் பின்
புல்லாங்குழல் ஊதிக் கொண்டு
ஆடிச் செல்வான்
ஆட்டிடையன் !
வெளுத்த வானை
வரவேற்று
வாலிபப் பெண்டிர்
குயிலைப் போல் பாடிச் செல்வார்
அவருக்குப் பின்னால் !
இப்போது
பகல் பொழுதின்
கனத்த கரங்கள்
அழுத்திக் கொண்டுள்ளது
நகரத்தை !
*************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 3, 2010)
- உற்றுழி
- ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -7
- யார் முதலில் செய்வது?
- அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர் (1878-1968)
- சினிமா விமர்சனம் பேசித்தீராத தனது சொற்களால் ஆன ஓர் இஸ்லாமியனின் பயணம் (My name is khan)
- மனத்தின் நாடகம் வளவ.துரையனின் “மலைச்சாமி”
- சீதாம்மாவின் குறிப்பேடு — ஜெயகாந்தன் -4
- இணையதமிழின் ஒருங்கிணைப்பு
- பரிபாடலில் முருகன் வரலாறு
- ‘பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா பற்றி
- சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
- ஆசிரியருக்கு
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.
- கவிதைகள்
- இதுவும் கடந்து போகும்!!?
- மீட்பாரற்ற கரையும் நண்டுகளின் நர்த்தனமும்
- வேத வனம் விருட்சம்- 75
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -2
- நைட் ட்யூட்டி
- கியான்
- பாசத்திற்காக ஓர் ஏற்பாடு
- பொல்லாதவன்
- என் வயிற்றில் ஓர் எலி
- முள்பாதை 19
- நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள்
- மொழிவது சுகம்: ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை
- ஆடம்பரமாய் செலவழிக்கப்படும் பல லட்சம் கோடிகள் – தீர்வு யார் கையில்??
- கூண்டுச் சிறுமி
- கே ஆர் மணி.
- கடன்
- காதலின் பெயர் பரிசீலனையில்..
- கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -4
- கைமாத்து