கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


01

நின்று சலித்த

நீள் பயணமொன்றில்

மென்று விழுங்கிய

பார்வையோடு நீ

விட்டுச் சென்ற

இருக்கையில்

இன்னமும்

உன் சூடு.

0

02

பிறை நிலா

நெற்றிப் பெண்ணின்

பின் முதுகில்

பௌர்ணமி நிலா.

0

03

தளும்புவதில்லை

நீர் நிறைந்த குடங்களுடன்

நீரற்ற குடங்களும்.

0

Series Navigation

author

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

Similar Posts