நடராஜா முரளிதரன்
சகல மூலைகளிலும் இருந்து
தனித்துவிடப்பட்ட போதும்
தாக்குவதற்கான படையணிகள்
இல்லாதபோதும்
கண்ணுக்குப் புலப்படாத
பிரதேசங்களிலிருந்து
கொடூரமான அம்புகள்
பாய்ச்சப்படுகின்றன
பெரும்பாலானவை
அது பற்றியதாகவே
இருக்கின்றது
வறுமை எவ்வளவு
கொடியதாக இருக்கின்றது
நேரகாலத்துக்கு
அது கணக்குகளை
முடித்துவிட
அனுமதிப்பதில்லை
அதனால்
முகம் குப்புறக்
கவிழ்க்கப்படுகின்றது
அதனைக் கண்டு
பலர் சிரித்தும்
சிலர் அனுதாபப்பட்டும்
எல்லாவற்றையும்
வென்று விடுவதற்கான
வைராக்கியத்தை இழந்து
நடந்து கொண்டிருக்கின்றேன்
மாலைச் சூரியன்
தெறித்து விழுந்து
நிழலாகிப் போகின்றது
என் நிழல் என்னை
விழுங்கி விட்டிருந்தது
பனிக்கும்பியின் உச்சிகள்
தகர்ந்து கொண்டிருந்தன
தோலைக் கிழித்து
நாளங்களின்
இரத்த ஓட்டத்தில் கலந்து
உடலின் மூலைமுடுக்குகளில்
குத்திக்கொண்டு நின்றன
அம்பின் கூரிய முனைகள்
nmuralitharan@hotmail.com
- உற்றுழி
- ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -7
- யார் முதலில் செய்வது?
- அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர் (1878-1968)
- சினிமா விமர்சனம் பேசித்தீராத தனது சொற்களால் ஆன ஓர் இஸ்லாமியனின் பயணம் (My name is khan)
- மனத்தின் நாடகம் வளவ.துரையனின் “மலைச்சாமி”
- சீதாம்மாவின் குறிப்பேடு — ஜெயகாந்தன் -4
- இணையதமிழின் ஒருங்கிணைப்பு
- பரிபாடலில் முருகன் வரலாறு
- ‘பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா பற்றி
- சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
- ஆசிரியருக்கு
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.
- கவிதைகள்
- இதுவும் கடந்து போகும்!!?
- மீட்பாரற்ற கரையும் நண்டுகளின் நர்த்தனமும்
- வேத வனம் விருட்சம்- 75
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -2
- நைட் ட்யூட்டி
- கியான்
- பாசத்திற்காக ஓர் ஏற்பாடு
- பொல்லாதவன்
- என் வயிற்றில் ஓர் எலி
- முள்பாதை 19
- நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள்
- மொழிவது சுகம்: ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை
- ஆடம்பரமாய் செலவழிக்கப்படும் பல லட்சம் கோடிகள் – தீர்வு யார் கையில்??
- கூண்டுச் சிறுமி
- கே ஆர் மணி.
- கடன்
- காதலின் பெயர் பரிசீலனையில்..
- கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -4
- கைமாத்து