கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

சி.சுந்தரம்


நம்பிக்கை

கடவுளை சாட்சிக்கு அழைக்க வேண்டிய
கட்டாய தருணத்தில்
கரையத் தொடங்கியது
கடவுள் நம்பிக்கை

உள்ளே நுழைதல்

என் வீட்டு வரவேற்பறையில்
மேஜையின் மீது கிடந்தன
பத்திரிக்கைகளும் டிவி ரிமோட்டும்

இணைய வசதி கொண்ட கணிணியும்
அங்கேதான் இருந்தது

நீங்கள் எனக்காக காத்திருந்தீர்கள்
பூட்டிய வீட்டின் முன் காத்திருக்கும் பாவனையில்

சி.சுந்தரம், துட்டம்பட்டி, தாரமங்கலம்

chinnusundaram@gmail.com

Series Navigation

author

சி.சுந்தரம்

சி.சுந்தரம்

Similar Posts