மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு சகோதரன் தன் சகோதரனைக் கூப்பிடுகிறான். தந்தை மகனை விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது பசிக் கொடுமை அனைவரையும் சமமாகச் சித்திரவதை செய்கிறது.
ஆனால் அதே சமயத்தில் மரணத்துக்குப் பசி இல்லை, தாகமில்லை ! மரணம் எமது ஆத்மாவை விழுங்கி எமது குருதியைக் குடித்து, எம்மைக் கிழித்துப் போடுகிறது ! அதன் கோரப் பசி மட்டும் திருப்தி அடைவதே இல்லை !
கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)
எனக்குக் கேட்கிறது நீ சொல்வது
என் கண்மணி !
உனது அழைப்பைக் கேட்டேன்
கடலுக்கு அப்பால் !
உடலைத் தொடும்
உன் மெல்லிறக்கை உணர்ந்தேன் !
படுக்கையை விட்டு
பசும்புல் தளத்தில் நடந்தேன் !
இரவின் பனித்துளிகள்
ஈரமாக்கும் என் பாதங்களை
அங்கியின் விளிம்பை !
இங்கு நிற்கிறேன்
ஆல்மண்டு மரப் பூக்களின்
கீழாக நானுனது
ஆன்மாவின்
அழைப்பைக் கேட்டு !
வாய் திறந்து பேசு என்னோடு
என் கண்மணி !
லெபனான் மலைப் பகுதியி லிருந்து
என் மீது வீசும் காற்றை
உன் மூச்சு வலுமை ஆக்கட்டும் !
பேசு என்னோடு
என் செவியைத் தவிர வேறு
எவர் காதிலும் விழாது !
எல்லோரையும் ஒன்றாய்
ஓய்வெடுக்க
இழுத்துப் போய் விட்டது
இரவு !
வெண்ணிலவின்
வெண்மைத் துகில் போர்த்தி
லெபனான் நாட்டையே
வான மண்டலம்
மூடி விட்டது என் கண்மணி !
தொழிற்சாலை வெளியேற்றும்
புகை மூட்டம் எழும்பி
வான் வெளி யாவும்
இரவு நிழலாய்
அங்கி போல் போல் மூடிப்
பரவியுள்ளது
அடர்த்தி யாக !
மரணத்தின் மூச்சு வீசி
நரகமாய்
நகர அரங்கு
நாசமாய்ப் போகும்
என் கண்மணி !
*************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2010)
- செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி (1897-1956)
- பாகிஸ்தான் என்ற நல்ல பக்கத்து வீட்டுக்காரன்
- ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுப்படும் ஆற்றல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -2
- இந்தியச்சூழல்களில் சமூக முரண்பாடுகளும் சமயங்களின் எதிர்வினைகளும் – தேசிய கருத்தரங்கு
- உயிர்பெற்ற சிற்பங்கள் கலாப்ரியாவின் “நினைவின் தாழ்வாரங்கள்”
- கவிதைக்குரிய காட்சிகள் செல்வராஜ் ஜெகதீசனின் “இன்ன பிறவும்”
- கற்பனையின் தளம் அரவிந்தனின் குழிவண்டுகளின் அரண்மனை
- டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் – ‘ஒரு சுமாரான கணவன்’
- சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -2
- அக்கினிப் பிரவேசம் !
- அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா
- ‘துணையிழந்தவளின் துயரம்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா
- 2009-ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள் – அறிவிப்பு
- ஒரு சமூகம்…. என்னை கடந்திருந்தது…..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -2
- வேதவனம்-விருட்சம் 73
- பெருநகரப் பூக்கள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -5
- ODI விளையாடு பாப்பா
- நீரலைகள் மோதி உடையும் படிக்கட்டுகள்
- முள்பாதை 17
- இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல்
- இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல் (முடிவு)
- வளரும் பருவத்தில் ஆசிரியர் – மாணவர், பெற்றோர் – குழந்தைகள் உறவுகள் மேம்பட….
- விலைபோகும் மில்களும் வீதிக்கு வந்த வாழ்க்கையும்
- தேடல்
- விருந்து
- குழந்தைக் கவிதைகள்
- என் தந்தை ஜெயந்தன்
- கவிதைகள்
- வழிதப்பிய கனவுகள்..!