ராமலக்ஷ்மி, பெங்களூர்.
என்னென்ன நம் தேவை
என்கின்ற கோணத்திலேயே
என்றைக்கும் சிந்தித்து
எப்படியோ ஒருமுடிவுக்கும் வந்து..
அதை அடைந்திடும் நோக்கம்
ஒன்றே வாழ்வாகிப் போனாற்போல்
துடிப்புடன் நாளதும் பொழுதும்
ஓயாமல் ஓடியாடி..
ஒருவழியாய் ஆசையது
நிறைவேறும் வேளைதனில்
தேடத்தான் வேண்டியிருக்கிறது
பலனாகக் கிடைத்ததா
துளியேனும் பரவசமென்று!
***
என்னென்ன தேவையில்லை
எனத் தீர்மானித்து
ஒருதெளிவாய் வாழ்கின்ற
வகையினருக்கு மட்டுமின்றி..
இதுயிதுவே தேவையென
எல்லைகள்
வகுத்துக் கொள்ளாமல்
விடிகின்ற காலைகளை
நன்றிப் புன்னகைசிந்தி
எதிர்கொள்வது போலவே
வருகின்ற வளர்ச்சிகளைச்
சந்தித்தவராய்
செய்யும் பணிகளிலே
கவனத்தைக் குவித்துத்
திறம்பட முடிப்பதையே
பேரானந்தமாய்
உணர்பவருக்கும்..
தேடாமலேதான்
கிடைத்து விடுகிறதோ
நம்மில் பலருக்கும்
தீராத் தேவையாகவே
இருந்துவரும் அந்தப்
பரிபூரண மனநிறைவு?
*** *** ***
ramalakshmi_rajan@yahoo.co.in
- செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி (1897-1956)
- பாகிஸ்தான் என்ற நல்ல பக்கத்து வீட்டுக்காரன்
- ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுப்படும் ஆற்றல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -2
- இந்தியச்சூழல்களில் சமூக முரண்பாடுகளும் சமயங்களின் எதிர்வினைகளும் – தேசிய கருத்தரங்கு
- உயிர்பெற்ற சிற்பங்கள் கலாப்ரியாவின் “நினைவின் தாழ்வாரங்கள்”
- கவிதைக்குரிய காட்சிகள் செல்வராஜ் ஜெகதீசனின் “இன்ன பிறவும்”
- கற்பனையின் தளம் அரவிந்தனின் குழிவண்டுகளின் அரண்மனை
- டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் – ‘ஒரு சுமாரான கணவன்’
- சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -2
- அக்கினிப் பிரவேசம் !
- அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா
- ‘துணையிழந்தவளின் துயரம்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா
- 2009-ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள் – அறிவிப்பு
- ஒரு சமூகம்…. என்னை கடந்திருந்தது…..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -2
- வேதவனம்-விருட்சம் 73
- பெருநகரப் பூக்கள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -5
- ODI விளையாடு பாப்பா
- நீரலைகள் மோதி உடையும் படிக்கட்டுகள்
- முள்பாதை 17
- இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல்
- இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல் (முடிவு)
- வளரும் பருவத்தில் ஆசிரியர் – மாணவர், பெற்றோர் – குழந்தைகள் உறவுகள் மேம்பட….
- விலைபோகும் மில்களும் வீதிக்கு வந்த வாழ்க்கையும்
- தேடல்
- விருந்து
- குழந்தைக் கவிதைகள்
- என் தந்தை ஜெயந்தன்
- கவிதைகள்
- வழிதப்பிய கனவுகள்..!