மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
"இரவின் அடர்ந்த காரிருளில் மரணம் மெல்ல நடந்து வருகிறது. நாங்கள் யாவரும் அதன் பின்னால் நடக்கிறோம். அது திரும்பி நோக்கும் போது நூற்றுக் கணக்கான ஆத்மாக்கள் பாதையின் இருபுறமும் தடம் புரண்டு கீழே விழுகின்றன ! விழுந்திடும் ஒரு நபர் விழிப்பதில்லை மீளா உறக்கத்திலிருந்து ! நடந்திடும் மாந்தர் நெஞ்சில் பயமுடனும் பின்னால் மரிக்கப் போகும் உறுதியுடனும் மடிந்தோருடன் சேர்ந்திடத் தொய்வு நடை போடுகிறார். மாலையின் மங்கிய செவ்வான வெளிச்சத்தின் தூரத்தில் மரணம் வெற்றி நடை போடுகிறது !
கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)
+++++++++
விழித்தெழு என் காதலி !
விழித்தெழு !
ஏழு கடல் தாண்டி
என் ஆத்மா வரவேற்கும்
உன்னை
தனது இறக்கைகளைப்
பொங்கும் அலைகள் மீது
அனுப்பி !
விழித்தெழு ! என் காதலி !
அமைதி யானது
அமுக்கி விட்டது
புரவிகள் போட்ட
பாத நடைகளின்
அரவத்தை,
பயணிகளின் படபடத்த
படி நடை
எட்டு வைப்புகளை !
தூக்கம் மெல்லத் தழுவிடும்
மானிட ஆன்மாக்களை
நான் தனியே
விழித்துள்ள போது !
உறக்கம் சூழ்ந்திடும் வேளை
என்னை
விழித்திட வைக்கும்
மோகம் !
உன்னருகே இழுத்திடும் காதல்
என்னை !
ஆயினும் தள்ளிடும் என்னைத்
தூரமாய்
மன உலைச்சல் !
மறதிப் பிசாசு ஒளிந்து
பயமூட்ட
படுக்கை விட்டெழுந்தேன்
அருமைக் காதலி !
பக்கத்தில் வைத்தேன் எனது
புத்தகத்தைப் படிக்காது.
நூலின் வார்த்தைகள் எல்லாம்
கவலையால்
ஊமையாய்ப் போயின !
விழிக்குத் தெரிந்தவை
வெளிறிய
வெற்றுத் தாள்களே !
விழித்தெழு என் காதலி !
விழித்தெழு
என் சொல் கேட்பாய் !
என் சொல் கேட்பாய் !
*************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 9, 2010)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிதை -23 பாகம் -1 ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்
- சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -1
- மொழிவது சுகம்: ஒளியும் நிழலும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -4
- ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- ஒளிமழை
- நிரப்பிச் செல்லும் வாழ்க்கை அசோகமித்திரனின் “நினைவோடை”
- ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்
- பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப்பூராடனார்
- முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும்
- வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.
- எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் வெளியீட்டு விழா
- சிதறிய கவிதைகள்
- மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு
- முள்பாதை 16
- கலியாணம் பண்ணிக்கிட்டா……
- யார் கூப்டதுங்க…?
- கலைஞர் தாக்கரே ஜெயராம் – இல்லாத வெளிக்குழுவும் எப்போதும் நம் குழுவும்
- கடைபிடி; முதல் படி!
- மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் – ஒரு விலாங்கு மீன்
- முன்னறிவிப்பின் பழுத்த மஞ்சள் நிறம்..!
- இடர்மழை
- வேத வனம் -விருடசம் 72
- ஊமை மொழிகள்..
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)