ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உதவ முடியா நெருக்கடிகள்
++++++++++
நீ விரும்பும் விசித்திர
நிகழ்ச்சிகளின் அறிகுறிகள் இவை :
இரவு முழுவதும் அழுது
உதயத்தின் போது
எழுந்து வேண்டுவாய் :
பகலுக்குத்
தேவை யானதை நீ
கேளாத போது
இருள் கவ்விக் கொள்கிறது !
உன் கழுத்து குச்சிபோல்
உள்ளது !
உனக்குச் சொந்த மான
உறக்கம், உடல் நலம்,
உன் சிந்தனை அனைத்தையும்
பிறர்க்குத் தானம் செய்யும்
ஒரு தியாகி நீ !
நெருப்பின் நடுவே நீ அமர்ந்து
நெளிந்த
மண்டைக் கவசம் அணிந்த
படையாளியின்
உடை வாளையும் தொடப் போவாய்
அடிக்கடி !
உதவ முடியா நெருக்கடிகள்
ஒருவருக்கு
நடமுறை யானால்
இவைதான்
எடுத்துக் காட்டும் அறிகுறிகள் !
+++++++++++++
ஆயினும் நீ அங்கு மிங்கும் ஓடி
அபூர்வ நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டு
ஆழ்ந்து நோக்குவீர்
பயணம் போகும் முகங்களை !
பைத்தியம் போல் நீ ஏன்
பார்க்கிறாய் என்னை ?
நண்பனை இழந்த என்னை
மன்னிப்பாய் !
அப்படித் தேடுவது
தோல்வி பெறாது ! உன்னை
நெருங்கி அணைத்துக் கொள்ளும்
ஒரு குதிரை வீரன்
வருவான் !
மயக்கமுற்று உளறுகிறாய் நீ !
முகவரி இல்லாதவர்
அவனைப் போலி என்பார்
அவருக்கு எப்படித் தெரியும் அது ?
கடற்கரை மீன் ஒன்றை
அடித்துத் தள்ளும்
நெருக்கடிகளின் கடல் நீர் !
என் குழப்பத்திற்கு மன்னிப்பீர் !
எப்படி ஒருவன் குழப்பத்தில் சீராய்
இயங்க முடியும் ?
***************************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 8, 2010)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிதை -23 பாகம் -1 ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்
- சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -1
- மொழிவது சுகம்: ஒளியும் நிழலும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -4
- ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- ஒளிமழை
- நிரப்பிச் செல்லும் வாழ்க்கை அசோகமித்திரனின் “நினைவோடை”
- ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்
- பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப்பூராடனார்
- முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும்
- வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.
- எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் வெளியீட்டு விழா
- சிதறிய கவிதைகள்
- மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு
- முள்பாதை 16
- கலியாணம் பண்ணிக்கிட்டா……
- யார் கூப்டதுங்க…?
- கலைஞர் தாக்கரே ஜெயராம் – இல்லாத வெளிக்குழுவும் எப்போதும் நம் குழுவும்
- கடைபிடி; முதல் படி!
- மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் – ஒரு விலாங்கு மீன்
- முன்னறிவிப்பின் பழுத்த மஞ்சள் நிறம்..!
- இடர்மழை
- வேத வனம் -விருடசம் 72
- ஊமை மொழிகள்..
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)