மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“என்னருமைக் காதலி ! தேசத்தின் வரலாறு தனிப்பட்ட குடிமக்களின் வாழ்க்கையைப் போன்றதுதான். நம்பிக்கையில் மலர்ந்து, அச்சத்தில் பின்னிய வாழ்க்கை பேராசையால் தாக்கப்பட்டு, மன முறிவால் தாழ்ச்சி அடைகிறது.”
கலில் கிப்ரான் (மனித ஐக்கியம்) (Union)
+++++++++
<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>
கவிதை -22 பாகம் -6
++++++++++++
மரங்கள் வசந்த காலத்தில்
மலர்களை
விரிக்கு மென உணர்கிறேன் !
வேனிற் காலத்தில் அவை
கனிகளைக் காய்த்துக் கொட்டும்
புகழை எதிர்பார்க் காது !
இலைகளை
எல்லாம் உதிர்க்கும் மரங்கள்
இலையுதிர் காலத்தில் !
அமணமாய் நிற்கும் மரங்கள்
குளிர் காலத்தில்
பழிப்புக்கு எவ்விதப்
பயமும் இல்லாமல் !
++++++++++++++
ஆத்மா எனக்குப் போதித்து
அறிவு புகட்டும் :
ஆ·பிரிக்கக் குள்ளனும் அல்லன்
நான் பூத வுடல்
அசுரனுக்குத் தாழ்ந்தோனும் அல்லன் !
என் ஆத்மா போதிப்பதற்கு
முன்னே
மனித இனத்தை
இரண்டாய்க் கண்டேன் !
பரிதாபப்படும்
பலவீன மானவன் ஒருத்தன் !
பின்பற்றும்
அல்லது எதிர்த்திடும்
வல்லமை பெற்றவன் ஒருத்தன் !
++++++++++++++
இப்போது கற்றுக் கொண்டேன் :
ஒரே மூலக்கூறுகளே நான்
அதுபோல்
ஒரே வித மூலகங்களால்
உருவாக்கப் பட்டவன் என்று !
எனது தோற்ற மூலாதாரமே
அவரது மூலா தாரமும் !
என் உள்ளத் துடிப்பு உணர்ச்சியே
அவரது உள்ளத் துடிப்பும் !
எனது மன திருப்தியே
அவரது இதய திருப்தியும் !
எனது வாழ்க்கைப் பயணமும்
அவரது யாத்திரையை
ஒத்ததுவே !
(தொடரும்)
*************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 26, 2010)]
- திரைகடல் ஓடியும் கலையைக் கற்போர் (ஹாங்காங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம்)
- முள்பாதை 15
- நூடில்ஸ்
- கே.பாலமுருகனின் ‘அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே – மணியம் பேருந்துகளும்’ – சிறுகதை விமர்சனம்
- வடமராட்சி – அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘அபராதி’ எனும் குற்றமிழைத்தவன்
- வீரசோழியம் இலங்கை நூலா? தமிழ்நாட்டு நூலா?
- எப்போதும் கவிதை என்னை எழுதியதேயில்லை கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி” கவிதைகள்
- நினைவில் உறைந்த வரலாறு முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- புதுவகை நோய்: இமி-முற்றியது
- Appeal for Donations For Temple’s permanent construction
- தமிழ் இணையப் பயிலரங்கம்
- மியம்மார் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம்.
- தமிழ்ச்செல்வனுக்கு …
- அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய என்ரிக்கோ ஃபெர்மி.
- பறவைகளின் வீடு
- இயற்கைதானே
- ராகவன் உயிர் துறந்தான்
- மறுகூட்டல்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -2
- அன்பாலயம்
- சூரியனும் சந்திரனும்
- மொழிவது சுகம்: புர்க்காவும் முகமும்
- துறை(ரை)களின் சூதாட்டமும் கவிழும் பொருளாதார / வெளியுறவு கொள்கைகளும்
- வாழ்வின் (அ) சுவாரஸ்யங்கள்
- வேத வனம் விருட்சம் 70
- இன்று
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -6
- கவிஞானி ரூமியின் கவிதைகள் கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -1 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !
- இயற்கைதானே
- திரு ஜயபாரதன் கட்டுரைகள்