மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“உனது விழிகளில் சோகத்தைக் காண்கிறேன் என்னருமைக் கண்மணி ! நீ என்னருகில் உள்ள போது துயர் அடைகிறாயா ? எனது புதல்வரும் புதல்வியரும் மீண்டும் வருவாரா என்று நான் துயரடைய என்னை விட்டு விட்டுக் கடல் தாண்டிப் புலம்பெயர்ந்து போய் விட்டார் !”
கலில் கிப்ரான் (மனித ஐக்கியம்) (Union)
+++++++++
<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>
கவிதை -22 பாகம் -5
++++++++++++
என் ஆத்மா போதிப்பதற்கு
முன்னே உணர்ந்தேன்
நடந்து சென்ற போதெல்லாம்
இடமெனக்குத்
தூரமாய்த் தெரிந்தது !
இப்போது
எனக்குத் தெரிகிறது :
எந்த இடத்தில் வசித்தேனோ
அந்த இடத்தில்
கிடைத்தன எல்லாம் !
நடந்து வந்த தொலைவில்
அடங்கின
அனைத்துத் தூரங்களும் !
++++++++++++++
ஆத்மா அறிவூட்ட
ஆலோசனை கூறும் எனக்கு :
பிறர் தூங்கும் வேளை நீ
விழித்திரு வெனச் சொல்லும் !
பிறர் வேலை செய்யும்
தருணத்தில் நீ
உறக்கத்தில்
சரண் அடை யெனக் கூறும் !
என் ஆத்மா உரைப்பதற்கு
முன்பு நான் என்
உறக்கத்தில் காணேன்
பிறரது கனாக்களை !
அதுபோல்
அவரும் என் உள்ளொளியைக்
காண வில்லை !
+++++++++++++++++
இப்போது நான்
எனது கனவுகளின்
கப்பலில்
செல்வ தில்லை அவர்
காணாத சமயத்தில் !
அவரும் தமது உள்ளொளியில்
வானுயர ஏறுவ தில்லை
நானவர் விடுதலையில்
ஆனந்தம்
அடையாத போது !
ஆத்மா எனக்குப் போதிக்கும் :
பிறர் உன்னைப்
புகழும் போது நீ
பூரிப்படை யாதே !
பிறர் உன்னைப் பழிக்கும் போது
வருத்தம் அடையாதே !
ஆத்மா அறிவுரை கூறுவதற்கு
முன்பு என் பணிகள்
பயனற்றவை என்று நான்
ஐயமுற்றேன் !
(தொடரும்)
*************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 19, 2010)]
- நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1
- பதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு
- வெற்றியில் கிறக்கம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)
- வேத வனம்- விருட்சம் 69
- பேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்
- சாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்
- ஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”
- கே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்
- கரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்
- பெரியபுராணம் – புராணமா? பெருங்காப்பியமா?
- கொஞ்சமாய் குட்டிக்கதைகள்
- விளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும்
- இடப்புற புகைப்படம்- ஒரு கடிதம்
- தோல்வியுறும் முயற்சிகள் :
- ஹெய்ட்டியின் கண்ணீர்
- கள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்
- கல்லை மட்டும் கண்டால்
- ஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்
- அந்த எதிர்க்கட்சிக்காரர்
- ஒரு விலங்கு.
- நைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்
- நைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)
- நான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்?
- முள்பாதை 14
- மொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.
- நினைவுகளின் சுவட்டில் – 42
- திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.
- திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)
- கொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்!
- பேசாத சொற்கள்
- வலி நிரம்பிய சரித்திரம்
- Thorn Book Release function