கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -7 மதுக்குடி அங்காடி (The Tavern)

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எரிந்து போன புலால் உணவு

++++++++++

ஒயின் வகைகளைச்
சுவைக்கக் கடந்த வருடம்
உவப்போடு இருந்தேன் !
செந்நிற உலகுக்குள்
சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன் !
சென்ற வருடம்
செந்தீயை உற்று நோக்கினேன்.
இவ்வருடம்
எரிந்த புலால் உணவாக
தகிக்கிறேன் !
தாகம் என்னைத்
தண்ணீருக்குள் தள்ளியது !
அங்கே
நிலவின் பிரதி பலிப்பை
அருந்தினேன் !

+++++++++++++

நானொரு சிங்கம் இப்போது,
மதுவின் மோகத்தில்
முழுவதும் மூழ்கிப் போய்
விழிக்கிறேன் !
தீராத என் இச்சை பற்றிக்
கேளாதீர் !
பாரீர் என் முகத்தை !
குடி போதையில் ஆத்மா !
முடங்கிப் போன உடல் !
உடைந்த வாகனத்தில்
உள்ளன அவை இரண்டும்
உதவி யின்றி !
எதற்கும் வண்டியைச்
செப்பனிடத்
தெரியவில்லை !

+++++++++++++++

புழுதிக் குழியில் விழுந்து
எழுந்திடத் தவித்து ஆழ்ந்து
புதைந்து போகும்
கழுதை போல்
என்னிதயம் தோன்றும்
எனக்கு !
ஆயினும் ஒருகணம் நான்
சொல்வதைக் கேள் !
துக்கமுறுவதைத் தவிர்த்திடு !
உன்னைச் சுற்றி
உனக்குக் கிடைத்துள்ள
கொடைகளின் மலர்ச்சியை
உனது
உடமையாய்க் காண்பாய் !

***************************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 11, 2010)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts