நான் யார்?

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

கோமதி நடராஜன்



===========
நேற்று நான் யார்?
இன்று நான் யார்?
நாளை நான் யார்?
நான் ,யாருக்கு யார்?
எனக்கே நான் ,யார்?
புரியவில்லை தெரிய வில்லை
தெரிவது போல் தெரிகிறது
புரியவில்லை
புரிவது போல் புரிகிறது ஆனால்
தெரிய வில்லை.
நேற்று நான் புழுவாய் நெழிந்திருப்பேன்
இன்று நான் மனிதனாய் வாழ்கின்றேன்
நாளை நான் பூண்டாக மாறலாம்.
இதில் மெய் மட்டும் நானா அல்லது
மெய் கூட பொய்யா.
ஆத்மா மட்டும் நானா அல்லது
ஆத்மா கூட அனர்த்தமா?
புரிய வில்லையே!
எனக்கே நான் யார் என்று
தெரியவில்லை இதில்
உனக்கு நான் சொந்தமென்றால்
வியப்பாய் இல்லை?
உனக்கே நீ யார் என்று புரிய வில்லை
இதில்எனக்கு நீ பந்தமென்றால்
நகைப்பாய் இல்லை?
ஒருவனுக்கு நான் மகன்
ஒருத்திக்கு நான் தம்பி
ஒருவனுக்கு நான் மாமன்
ஒருத்திக்கு நான் மச்சான்
இருந்து விட்டுப் போகட்டும்
இறைவனுக்கு நான் யார்?
அது தெரிந்தால் போதும்
என் ஜென்மம் சாபல்யமாகும்
அடுத்த ஜென்மத்தில்
உயிரும் மெய்யும் உவகையுடன் ஒன்றாகும்.

Series Navigation

author

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

Similar Posts