ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
மயிரைப் பிளப்பதிலும்
நுணுக்க மாகத் திருக்கம் செய்து
சீரமைக்கும் மனது !
ஆயினும்
கலைப் படைப்போ
கைச் செதுக்கோ
துவக்கம் ஆவது மில்லை
தொடர்வது மில்லை
குருதேவர் ஒருவர்
அரிய ஞானம் புகட்டாது !
கவிஞர் ரூமி
+++++++++++
கவிதை -2 பாகம்-4
மதுக்குடி அங்காடி
குழந்தைகளின் விளையாட்டு
++++++++++
விளையாட்டுக் குதிரைகள் மீதேறும்
மதலைகள் போலச்
சேனைப் படையினர்
புரவி மேல் ஏறிப்
புகழ்ந்து கொள்வார் !
போர் புரிவதலிலும்
புணர்ச்சிக் கலவையிலும்
பொருளில்லை
உமது வினைகளுக்கு !
‘தந்தானே தகிடத் தந்தானே’ என்று
இடை உடுப்பைப் பற்றித்
தவ்வித் தவ்விச் சுற்றுகிறாய் !
+++++++++++++
மரணம் வரும்வரைப் தாமதிக் காதே
இதனைக் காண !
அறிந்து கொள்வாய் நீ
உனது கற்பனை, உனது சிந்தனை
உணர்ச்சிக் கூர்மை ஆகியவை
மதலையர் செதுக்கி
மூங்கில் கணுக்கு களைக்
குதிரை போல் வடித்தவை !
++++++++++++++
மர்மக் காதலரைத் தெரிந்து கொள்வதில்
மாறாட்டம் உள்ளது !
சுருக்கப் பட்ட விஞ்ஞானம்,
உணர்ந்திடும் ஆன்மீகம் ஆகியவை
கழுதை மீதேற்றிய
பொதிகள் போன்றவை ! அல்லது
அழகி ஒருத்திக்குப் பூசிய
ஒப்பனை போல்பவை !
கழுவினால் அழிபவை !
+++++++++++++
பளுவைச் செம்மையாய்த் தூக்கினால்
களிப்பினை அளித்திடும் !
ஆயினும்
சுயத் தேவைக்கு
அறிவுப் பொதி சுமப்பதை
நிறுத்திடு !
இச்சைகளையும் வேண்டுதலையும்
தவிர்த்திடு !
உன் கால் அடியே
ஓர் உண்மைப் பீடம் தோன்றலாம் !
வார்த்தை களால் வெறும்
ஒப்பனை செய்யும்
கடவுளின்
ஒலிப் பெயரைக் கேட்டு
அடையாதே
அகத்தினில் திருப்தி !
***************************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
+++++++
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 22, 2009)]
- வாழ்க்கை
- வேத வனம் விருட்சம் 65
- பதில்களின் சொரூபம்
- முள்பாதை 10
- கவிஞானி ரூமியின் கவிதைகள்(கி. பி. 1207-1273)கவிதை -2 பாகம்-4மதுக்குடி அங்காடி (The Tavern)
- பவனி
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 3)
- இராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை
- மலையமான் திருமுடிக்காரி
- பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை…கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை
- குழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்)
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.
- உயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள்
- இந்திய மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுப்பது (அல்லது சிதைப்பது) குறித்து
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -1
- ஏக்கத்தின் நீளம் 2010
- பாவப்பட்ட அது
- அப்பாவி சிறுவன்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -3
- பசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள்
- கோயிற் சிலையோ?
- மு டி வு அ வ ன் கை யி ல்!
- ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம்
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- விஷம்
- நான்
- டெர்மினெட்டர் ஒன்றும் இரண்டும்
- கூடல் பொழுதில் கசியும் கானல் நீர்
- இரண்டு கவிதைகள்