ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
போனது என் அகமும் புறமும் !
வான மில்லை ! வையம் இல்லை !
நிலவு மில்லை !
அடுத்துமோர் கிண்ணத்தில் ஒயினை
அளிக்காதீர் எனக்கு !
வாயில் ஊற்றுவீர் அதனை !
வழி மறந்து போனது
வாயிலே குடிக்கும் முறை !
கவிஞர் ரூமி
+++++++++++
நாமருந்தும் ஒயின் மெய்யாக
நமது குருதி யேதான் !
இந்த அண்டாக்களில்
புளித்துப் போய்
பொங்கியவை நம் உடல்கள் தான் !
இருப்பதை
எல்லாம் நாம் கொடுப்போம்
ஒரு குவளை ஒயினுக்கு !
தருவோம் நம் இதயத்தையும் கூட
ஒரு மடக்கு மது குடிக்க !
கவிஞர் ரூமி
+++++++++++
கவிதை -2 பாகம்-3
மதுக்குடி அங்காடி
குழந்தைகளின் விளையாட்டு
ஒதுங்கிக் கிடந்த கவிஞர் சேனாய்
உரைப்பதைக் கேளாய் :
“தெருவினில் அலைந்து திரியாதே
குடி போதையில் !
மதுக் கடையில் தூங்கு !”
தெருவில் திரியும் போது
குடிகாரனைக் கண்டு கேலி செய்யும்
குழந்தைகள் !
சகதியில் தடுமாறி விழுவான்
குடிகாரன்
எந்தத் தெருவிலும் போவான் !
எல்லாத் தெருக் களிலும் திரிவான் !
சிறுவர் அவன்பின் செல்வார்
ஒயின் சுவையை அறியார் சிறுவர்,
குடிகாரர் மனநிலை உணரார் !
ஒரு சிலரைத் தவிர
உலக மாந்தர் அனைவரும்
குழந்தைகள் தான் !
இச்சையில் மூழ்காத சிலரைத் தவிர
எல்லாரும்
முதிர்ச்சி அடையா தவர் !
+++++++++++++
இறைவன் கூறினார் இவ்விதம் :
“இவ்வுலகம் ஒரு நாடகம் !
சிறுவரின் விளை யாட்டுகள் அவை !
நீவீர் யாவரும்
விளையாட்டுப் பிள்ளைகள் !”
இறைவன் சொன்ன துண்மைதான் !
சிறுவர் விளையாட்டை
நீக்கா விடில் நீவீர்
முதியவர் ஆவ தெப்படி ?
ஆன்மீகத் தூய்மை அடையாது
ஆசைக்கும் காமத் துக்கும் இடையே
அடிமை யாய்க் கிடக்கிறீர் !
அவசிய மான வற்றிலும்
மதலையர் போல் வாழ்கிறீர்
உடலுறவு இன்பத்தில் திளைத்துப்
போராடுவர் அவர்,
புணர்ச்சி யில்லை அது !
மனித இனப் போர்களில் இதுபோல்
வாய்ப் போர் புரியும்
வெறும் விளையாட்டு வாள்கள் !
குறிக்கோ ளில்லாமல்
வீணாகும் முயர்ச்சி
முழுவதும் !
***************************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
+++++++
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 15, 2009)]
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -2
- “கரப்பான் பூச்சி பிரபஞ்சம்” (cosma…a cocoon of cockroch)
- மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்
- மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல் (முடிவுப்பகுதி)
- குலாபி தியேட்டர் சினிமாவை முன்வைத்து
- 67 வயதில் சிறுவனான மாயம்
- திலகபாமாவின் மறைவாள் வீச்சு
- சினிமா கட்டுரை யஸ்மின் அமாட் சினிமா : “sepet” ஒரு சீன வாலிபன் – ஒரு மலாய்க்காரப் பெண் – மறக்க முடியாத காதல் கதை
- யுவனின் குண்டூசி தேடாத யானைகள் – நாவல் விமர்சனம் (1)
- யுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)
- இ.பா வின் ‘வேதபுரத்து வியாபாரிகள்’- ஒரு அரசியல் அங்கத நாவல்.
- பைக்காரா
- ஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்
- தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 2)
- வேத வனம் –விருட்சம் 64
- டிராகன்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -2
- மூன்று கதைகள்
- வாடகை
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..
- அதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்
- இரவினில் பேசுகிறேன்
- காதல்
- நிச்சயமாக உனதென்றே சொல்
- நூலகத்தில் பூனை
- பனி சூழ்ந்த பாலை!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.