ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஜனவரி மாதம்
சிரமக் காலம் !
பகற் பொழுது கவலை யற்றுப்
பகலவ னோடு கைகோர்க்கும் !
கிண்ணத்தில் இட்ட
ஒயின் மதுபோல்
திண்ணமான பொன்னும்
மண்ணுலகை நிரப்பும் நீல
வண்ணத்தின்
வரம்பு விளிம்பில் !
++++++++++
பருவக் காலங்களின்
கொடுமையில்
திராட்சையின் பச்சைப் பிஞ்சுகள்
கசப்புச் சுவையைக்
கொதித்துத் திரவமாக்கும் !
பகற் பொழுதின்
குழப்பத்தில் மறைந்து போனக்
கண்ணீர்த் துளிகள்
பொங்கி வீழும்
கொத்துக் களாய்
கேடு தரும் காலநிலை
வாடி வெறுமை ஆக்கும் வரை !
+++++++++++
கிருமிகளை விதைத்தால்
பெருந்துயர் விளையும் !
கொளுத்தும் ஜனவரி
வெய்யிலில்
பயத்தால் தவிக்கும் ஒவ்வொன்றும்
பழுத்துக் கனியாகும் !
பழங்கள் முற்றியதும்
வெந்து போகும்
வெப்பத் தழலில் !
++++++++++++
நமது பிரச்சனைகளும்
முறிந்து போய்ப்
பிரிந்து விடும் !
ஆத்மாவை
அடித்துச் செல்லும்
புயல் போல !
இங்கு நாம் வசிக்கும்
இந்த மாநிலம்
துப்புர வாகும் மீண்டும்
புது ரொட்டி
மேஜை மேல் பரிமாறி !
++++++++++++++
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 10, 2009)]
- வங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 60 << நமது பிரச்சனைகள் நீங்கும் >>
- சந்தர்ப்பவாதிகள்
- இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2)
- என் எழுத்து அனுபவங்கள்
- நூல் அறிமுகம்: ‘குறுந்தொகை’க்கு ஒரு புதிய உரை
- குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
- கடிதம்
- மறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்) தீட்சண்யம் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா
- திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -4
- நான் மட்டும் இல்லையென்றால்
- இயல்பாய் இருப்பதில்..
- நுவல்
- அம்ரிதா
- மீண்டும் துளிர்த்தது
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -7
- வேத வனம் -விருட்சம் 59
- முள்பாதை 5
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- எனக்காக நீ கட்டுவதாய் சொன்ன சொர்க்கம்
- மழையும்…..மறுக்கப்பட்ட நானும்………..
- நகரத்துப் புறாவும், நானும்!
- பயணம் சொல்லிப் போனவள்…
- கோரமுகம்