ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பசுமை நிறம் ! பேரமைதி !
வெளிச்சத்தில் ஈரம் !
மாட்டில்தி(*) ! நீ
தென்கரைப் பகுதிகளில்
கடலையும் மணல் கற்களையும்
கடந்த போது
பகல் வேளையில்
ஜூன் மாதம் நடுங்கியது
பட்டாம்
பூச்சி போல் !
++++++++++
இரும்புப் பூக்களைக்
கரங்களில் நீ
பளுவாய் ஏந்திச் செல்கையில்
கடற் பசிகள் மோதின !
தென்திசைக் காற்று
புறக்கணிக்கும் ! ஆயினும்
அரித்திடும்
உன் உப்புக் கரங்கள்
இன்னும் வெளுத் திருக்கும்
மணலிலே
மலர்ந்த செடித் தண்டுகள்
கலந்து போய் !
+++++++++++
உனக்குக் கிடைத்துள்ள
தூய்மை யான
கொடைகள் மேல் காதல்
எனக்கு !
பளிங்கு போன்ற தோல்
உனக்கு !
உன் நகங்கள்,
உன் வெகுமதிகள்
உன் விரல்களின்
பரிதிகள் !
பூரிப்பு பொங்கிப் பூக்கும்
உனது வாயில் !
++++++++++++
பாதாளக் குழிக்கு அருகில்
உள்ள
எந்தன் இல்லத்தில்
சித்திர வதையில் கட்டிய
அந்த மௌனத்தை
அளிப்பாய் நீ
எனக்கு
மணல் வெளியில்
மறந்து போன
கடற்கரை
மாளிகையி லிருந்து !
++++++++++++++
மாட்டில்தி(*) – காதலியின் பெயர்
++++++++++++++
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]
- செல்லமாவின் மரணத்திற்கு வந்தவர்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் மீண்டும் சோதனை துவங்குகிறது !
- திண்ணை நவம்பர் குறுக்கெழுத்து
- உலக சினிமா விமர்சனம் பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான வடிவமும் – ஒரு மௌன போராட்டம்
- மீண்டும் நாடகம் வருமா?
- கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி
- ஒரே மாதிரி இரு வேறு ‘வடு’க்கள்
- காலை வாரி விடுதல் …..
- காங்கிரஸ் போடும் கணக்கு ( அக்னிபுத்திரன் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை )
- தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன:
- உயிர் தொங்கும் வாழ்க்கை
- இன்றின் கணங்கள்
- பொய்யாகிப் போன ஒரு பொழுது
- போகிற போக்கு…
- நட்பு
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 59 << உன் தூய கொடைகள் >>
- வேத வனம் விருட்சம் 58
- நிஜம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -6
- தாத்தா பேரன்
- பொழுது விடிந்தது
- முள்பாதை 4 (புகழ்பெற்ற தெலுங்கு நாவல் தொடர்)
- முள்வேலிமுகாம்களிலிருந்தும் ஊர்விலக்கத்திலிருந்தும் விடுதலைக்கான தீர்மானங்கள்
- முகங்கள்: பேரா.தி.ந.ஜெகதீசன்
- நினைவுகளின் தடத்தில் – (37)
- ஆன்மீக வியாபாரிகள்
- பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- காணும் கடவுள்கள்
- இருந்து …இறந்தது…….
- எனது டயரிக் குறிப்பில் வார்த்தை
- என் சவாரியும் அப்பா என்ற குதிரையும்
- கோ.கண்ணன் கவிதைகள்:
- கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி