ஹெச்.ஜி.ரசூல்
எனது டயரிக் குறிப்பில்
இன்னும் அந்த வார்த்தை இருந்தது.
மிதமான வெயிலில் காய்ந்தும்
அடைமழையில் நனைந்தும்
கொடும்பனியில் உறைந்தும்
ஒரு செடியில் பூத்த பூவின்மீது
அந்த வார்த்தை உட்கார்ந்து
தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டது.
நகங்கள் பிராண்டிப் பார்த்தன.
தூரங்களை கடந்துவந்த
ஒவ்வொரு தருணங்களிலும்
ஊசிகளால் துளைக்கப்பட்ட
அந்த வார்த்தை கதறி தொலைக்கவில்லை.
தன் கூட்டில் வந்துபோன
குஞ்சுகளையெல்லாம் அரவணைத்ததால்
குஞ்சுகளெல்லாம் பிறகொருதடவை
அந்த வார்த்தைக்கு
தாங்கள் கட்டிய கூட்டினைத் தந்தன.
அந்த வார்த்தை உருவாக்கிய
வேறுசில துணைவார்த்தைகள்
முரண்கொண்டு மோதின.
தான் கைப்பிடித்து அழைத்துச் சென்ற
சின்ன சின்னவிரல்கள்
தன்னையே எதிர்த்தபோது
துக்கம் மட்டுமே பெருகியது.
வழிப் போக்கர்கள் எல்லாம் வந்து உட்கார்ந்து
ஒரு நிமிடம் பேசிவிட்டு செல்கிறார்கள்.
தன் கைவசமிருக்கும்
ஆயிரம் ஆயிரம் கதைகளை கேட்பதற்கு
ஆளின்றி தவித்த வார்த்தை
அவரவருக்கான சுதந்திரத்தை
உறுதி செய்தவாறு
திண்ணையில் படுத்திருந்தது .
- செல்லமாவின் மரணத்திற்கு வந்தவர்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் மீண்டும் சோதனை துவங்குகிறது !
- திண்ணை நவம்பர் குறுக்கெழுத்து
- உலக சினிமா விமர்சனம் பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான வடிவமும் – ஒரு மௌன போராட்டம்
- மீண்டும் நாடகம் வருமா?
- கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி
- ஒரே மாதிரி இரு வேறு ‘வடு’க்கள்
- காலை வாரி விடுதல் …..
- காங்கிரஸ் போடும் கணக்கு ( அக்னிபுத்திரன் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை )
- தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன:
- உயிர் தொங்கும் வாழ்க்கை
- இன்றின் கணங்கள்
- பொய்யாகிப் போன ஒரு பொழுது
- போகிற போக்கு…
- நட்பு
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 59 << உன் தூய கொடைகள் >>
- வேத வனம் விருட்சம் 58
- நிஜம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -6
- தாத்தா பேரன்
- பொழுது விடிந்தது
- முள்பாதை 4 (புகழ்பெற்ற தெலுங்கு நாவல் தொடர்)
- முள்வேலிமுகாம்களிலிருந்தும் ஊர்விலக்கத்திலிருந்தும் விடுதலைக்கான தீர்மானங்கள்
- முகங்கள்: பேரா.தி.ந.ஜெகதீசன்
- நினைவுகளின் தடத்தில் – (37)
- ஆன்மீக வியாபாரிகள்
- பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- காணும் கடவுள்கள்
- இருந்து …இறந்தது…….
- எனது டயரிக் குறிப்பில் வார்த்தை
- என் சவாரியும் அப்பா என்ற குதிரையும்
- கோ.கண்ணன் கவிதைகள்:
- கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி