ரிஷி
வீதியெங்கும் மன்னர்கள் _
வெண்கொற்றக்குடையிழந்து
விரைந்தேகிக் கொண்டிருக்கிறார்கள்
வயிற்றுக்குச் சோறிட.
சோறு என்பதன் பொருள் சிலருக்குக்
கால்வயிற்றுக் கூழாகவும், இன்னும் சிலருக்கு
மூன்று வேளை உணவாகவும்,
மேலும் சிலருக்கு சோறை மீறிய
சிறு சிறு சொத்துக்களாகவும்,
மிகப் பெரும் செயலாட்சிப் பரப்பெல்லைகளாகவும்…..
வாகனங்கள் பெருகப் பெருக
சிறுத்துக்கொண்டே வரும் சாலைகள்
உருமாறிவிடக்கூடுமோ ஒரு நாள்-
எறும்புப்புற்றுகளாய்…?
நடைபாதைகளும் இருசக்கர வண்டிகளுக்கென்றான பின்
பாதசாரிகள் பதுங்குகுழிகளைத் தேடியலைந்தவாறு…
புதையுண்ட மனிதர்கள் நிரம்பிப் புதையுண்ட பதுங்குகுழிகளை
பின்னொரு காலத்திலேனும் அகழ்வாராய்ச்சியாளர்கள்
கண்டெடுக்கக் ஏலுமோ?
நகரும் வதைமுகாம்களாய் பேருந்துகள்.
வலப்புறம் அமர்ந்திருக்கும் வாலிபப் பெண்களின் செவிகளில்
வேரோடியிருக்கின்றன கைபேசிகள்.
சாலைவிதிகள் மீறப்படுவதே வாழ்க்கையான சூழலில்
மனித உரிமைகளும் ஆழக் குழுதோண்டிப்
புதைக்கப்பட்ட வண்ணம்…
- செல்லமாவின் மரணத்திற்கு வந்தவர்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் மீண்டும் சோதனை துவங்குகிறது !
- திண்ணை நவம்பர் குறுக்கெழுத்து
- உலக சினிமா விமர்சனம் பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான வடிவமும் – ஒரு மௌன போராட்டம்
- மீண்டும் நாடகம் வருமா?
- கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி
- ஒரே மாதிரி இரு வேறு ‘வடு’க்கள்
- காலை வாரி விடுதல் …..
- காங்கிரஸ் போடும் கணக்கு ( அக்னிபுத்திரன் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை )
- தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன:
- உயிர் தொங்கும் வாழ்க்கை
- இன்றின் கணங்கள்
- பொய்யாகிப் போன ஒரு பொழுது
- போகிற போக்கு…
- நட்பு
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 59 << உன் தூய கொடைகள் >>
- வேத வனம் விருட்சம் 58
- நிஜம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -6
- தாத்தா பேரன்
- பொழுது விடிந்தது
- முள்பாதை 4 (புகழ்பெற்ற தெலுங்கு நாவல் தொடர்)
- முள்வேலிமுகாம்களிலிருந்தும் ஊர்விலக்கத்திலிருந்தும் விடுதலைக்கான தீர்மானங்கள்
- முகங்கள்: பேரா.தி.ந.ஜெகதீசன்
- நினைவுகளின் தடத்தில் – (37)
- ஆன்மீக வியாபாரிகள்
- பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- காணும் கடவுள்கள்
- இருந்து …இறந்தது…….
- எனது டயரிக் குறிப்பில் வார்த்தை
- என் சவாரியும் அப்பா என்ற குதிரையும்
- கோ.கண்ணன் கவிதைகள்:
- கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி