ராமலக்ஷ்மி, பெங்களூர்.
வெளிச்சத்தில் காணநேரும்
ஒளிச் சிதறல்களோ
விளக்கு அலங்காரங்களோ
ஆச்சரியம் அளிப்பதில்லை.
அற்புத உணர்வைக்
கொடுப்பதுமில்லை.
இருளிலேதான் அவை
உயிர்ப்பாகி ஜொலிப்பாகி
உயர்வாகத் தெரிகின்றன.
வாழ்வின் வசந்தகாலத்தில்
வாசலில் விரிந்துமலர்ந்து
சிரிக்கின்ற
வண்ணக் கோலங்கள்
எண்ணத்தை நிறைப்பதில்லை
கண்ணுக்கும் விருந்தாவதில்லை.
பருவங்கள் மாறிமாறி
வரும் உலகநியதி
வாழ்வின்மீதான நம்
பார்வையையும் மாற்றிடத்தான்-
போன்ற
சிந்தனைகள் எழுவதில்லை,
சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.
இன்னல் எனும்ஒன்று
கோடை இடியாகச்
சாளரத்தில் இறங்குகையிலோ-
திறக்கின்ற சன்னலின்ஊடாகத்
திடுமெனப் புகுந்து
சிலீரெனத் தாக்கும்
வாடைக் காற்றாக
வாட்டுகையிலோதான்-
துடித்துத் துவளுகின்ற
கொடியாய் மனம்
பற்றிப் படர்ந்தெழும்
வழிதேடித் திகைத்து-
கவனிக்க மறந்த
இன்றின் சின்ன சின்ன
சந்தோஷக் கணங்களை
கவனமாய் உணர்ந்து-
சிலிர்த்துச் சிறகடித்துப்
பறக்கிறது வானிலே!
தவிர்க்க முடியாத
தவறும் இல்லாத
இயல்புதானே
இது வாழ்விலே!
*** *** ***
நன்றி: இலக்கியப்பீடம் மாத இதழ், அக்டோபர் 2009.
ராமலக்ஷ்மி, பெங்களூர்.
ramalakshmi_rajan@yahoo.co.in
- செல்லமாவின் மரணத்திற்கு வந்தவர்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் மீண்டும் சோதனை துவங்குகிறது !
- திண்ணை நவம்பர் குறுக்கெழுத்து
- உலக சினிமா விமர்சனம் பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான வடிவமும் – ஒரு மௌன போராட்டம்
- மீண்டும் நாடகம் வருமா?
- கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி
- ஒரே மாதிரி இரு வேறு ‘வடு’க்கள்
- காலை வாரி விடுதல் …..
- காங்கிரஸ் போடும் கணக்கு ( அக்னிபுத்திரன் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை )
- தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன:
- உயிர் தொங்கும் வாழ்க்கை
- இன்றின் கணங்கள்
- பொய்யாகிப் போன ஒரு பொழுது
- போகிற போக்கு…
- நட்பு
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 59 << உன் தூய கொடைகள் >>
- வேத வனம் விருட்சம் 58
- நிஜம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -6
- தாத்தா பேரன்
- பொழுது விடிந்தது
- முள்பாதை 4 (புகழ்பெற்ற தெலுங்கு நாவல் தொடர்)
- முள்வேலிமுகாம்களிலிருந்தும் ஊர்விலக்கத்திலிருந்தும் விடுதலைக்கான தீர்மானங்கள்
- முகங்கள்: பேரா.தி.ந.ஜெகதீசன்
- நினைவுகளின் தடத்தில் – (37)
- ஆன்மீக வியாபாரிகள்
- பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- காணும் கடவுள்கள்
- இருந்து …இறந்தது…….
- எனது டயரிக் குறிப்பில் வார்த்தை
- என் சவாரியும் அப்பா என்ற குதிரையும்
- கோ.கண்ணன் கவிதைகள்:
- கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி